- வாயு சம்மந்தமான உணவுகளை தவிர்க்கவும் (உதாரணமாக. உருளைக்கிழங்கு, முள்ளங்கி, தக்காளி, கருவாடு, ஐஸ்கிரீம், ஐஸ்வாட்டர் மற்றும் உடம்பு ஒத்துக்கொள்ளாத சில உணவு வகைகள்.
- கர்ப்ப காலங்களில் காமம், குரோதம், மோகம், பயம், கோபம் போன்றவைகள் இருக்கக்கூடாது.
- ஆண்-பெண் சேர்க்கையின் போது பெண் ஈரத்தலையோடு இருக்கக்கூடாது, மற்றும் இரவரும் மலம், ஜலம் கழியாமல் அடக்கிக்கொண்டு ஒன்று சேர்தல் கூடாது.
ஆண்-பெண் இருபவரும் ஒன்று சேரும்போது பத்து தச வாயுக்களின் சமமான சக்தியானது கருப்பையில் கருவாக ஒரு நிலையாக நிறுத்தப்படுகிறது. மாறாக சமநிலை சக்தியை இழந்தால் பாதிப்பை உண்டாக்கும். குழந்தை பிறந்த சில காலங்களுக்குள் அபானன், உதானன், தனஞ்செயன் வாயுக்கள் பாதிப்படைந்து எட்டு வித பாலவாதத்தை தோற்றுவிக்கின்றது.