Friday, 20 December 2019

அகஸ்தியர் ஞானம் - 2

ஞானம் - 2
..................................................................................................................................

மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
      மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா;
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா;
      மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே.

..................................................................................................................................

உண்ணும்போ துயிரெழுத்தை வுயர வாங்கி
      உறங்குகின்ற போதெல்லா மதுவே யாகும்;
பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம்
      பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு;
திண்ணுங்கா யிலைமருந்து மதுவே யாகும்
      தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு
      மறலிகையில் அகப்படவு மாட்டார் தாமே.

..................................................................................................................................

ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று
      உமையவளுங் கணபதியு முந்தி யாகி
விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும்
      விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா!
பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு
      பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு;
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்
      கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே;

..................................................................................................................................

விந்துநிலை தனையறிந்து விந்தைக் கண்டால்
      விதமான நாதமது குருவாய்ப் போகும்
அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால்
      ஆதியந்த மானகுரு நீயே யாவாய்
சந்தேக மில்லையடா புலத்தி யனே
      சகலகலை ஞானமெல்லா மிதற்கொவ் வாவே;
முந்தாநாள் இருவருமே கூடிச் சேர்ந்த
      மூலமதை யறியாட்டால் மூலம் பாரே.

..................................................................................................................................

மூலமதை யறிந்தக்கால் யோக மாச்சு
      முறைமையுடன் கண்டக் கால் வாதமாச்சு;
சாலமுடன் கண்டவர்முன் வசமாய் நிற்பார்
      சாத்திரத்தைச் சுட்டெறிந்தாலவனே சித்தன்;
சீலமுள்ள புலத்தியனே! பரம யோகி
      செப்புமொழி தவறாமல் உப்பைக் கண்டால்
ஞானமுள்ள எந்திரமாஞ் சோதி தன்னை
      நாட்டினால் சகலசித்தும் நல்கும் முற்றே.

.................................................................................................................................. 

0 comments:

Post a Comment