Saturday, 14 April 2018

சித்தர்களின் நூற்களும் - கல்வியும்

சித்தர் நூற்களின் சிறப்பு 

சித்த மருத்துவ நூற்கள் உலகின் மற்ற மருத்துவ நூற்களைவிட முற்றிலும் மாறுபட்டதும் - நூதனமானவையுமாகும். காரணம், இதில் வைத்தியத்தோடு வாதம்-யோகம்-ஞானம்-மாந்திரீகம்-சோதிடம் முதலியனவும் கலந்துள்ளன. எனவே, மிக விரிவான ஆதாரங்களைக் கொண்டதாகும். சித்தர்களுள்-போகர், புலிப்பாணி, இராமதேவர் முதலிய சிலரைத் தவிர-பெரும்பாலோர் தமிழர்களேயாதலால், இம்முறை தமிழத்திற்கே உரியதாகும். எனவேதான் இந்நூற்கள் தமிழில் மட்டுமே கூறப்பட்டுள்ளன. மேலும், ஆயுள்வேதம் ஆரியரின் தெய்வ அருளைக் குறிப்பது போல்-சித்த முறையும் சிவசக்தியின் கருணையால் ஆக்கப்பட்டதாகும். பண்டைய நாகரிகத்தில், இது பல சித்திகளைப் பெற்றுள்ளது. சகல தந்திர-வித்தை நூற்களிலும் சித்தர்கள் கண்ட அறிவும்-திறனும் அபாரமானது. அவர்கள், மருத்துவத்தைக் கையாண்ட சமயம் பொற்காலமாகும். சித்தர் நூற்களிலுள்ளவை பற்றிய வினாக்களுக்கு விடையளிப்பது எளிதல்ல. இவை, சித்தர்கள் ஆன்ம சக்தியைப் பெற்றபின்-சகலத்தையும் மிகத்தெளிவாக அறிந்த பின், ஞானவிளக்க அறிவால், உண்மையின் அடிப்படையில், அனுபவரீதியாக அருளப் பெற்றவையாகும். எனவே, ஒருமித்த மனதோடு, கடும் முயற்சியுடன் கற்றாலன்றி இவற்றின் பல கருத்துக்கள் புரியாது - ஒரு இரகசியமான கலையாகவே தோன்றும்.

Reference book : Siddha Maruthuva Gurugulam

0 comments:

Post a Comment