Thursday, 12 July 2018

சித்தர்கள் உருவாக்கிய வர்ம மருத்துவத்தின் விளக்கம்

சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவம் ஆகும். சித்தர்கள் தங்கள் ஞான அறிவின் பயனாக உருவாக்கிய மருத்துவமாகும். இந்த மருத்துவம் ஒவ்வொரு இடத்திற்கேற்ப தட்பவெப்ப நிலையில் கிடைக்கக்கூடிய எண்ணற்ற புல்பூண்டுகள், செடிகொடிகள், பழங்கள், விதைகள், பிசின்கள், வேர்கள் ஆகியவற்றைக் கொண்டு தைலங்கள், கஷாயங்கள், செந்தூர பஸ்பங்கள் போன்றவற்றைக் கண்டுபிடித்து நோய்களை சிகிச்சை அளிக்கும் முறையே சித்த மருத்துவம். அதன்பின் வர்மத்தின் மீது தங்கள் கவனத்தை அதிகம் செலுத்தினர். அதாவது உடம்பைத் தொட்டுப்பார்த்து சிகிச்சையளிக்கும் முறையை உருவாக்கினர். அதுதான் வர்மக் கலை.
வர்மக்கலைக் கற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபடடவர்களாக, அசாதரண சக்தி பெற்றவர்களாக ஆக்குகிறது. யோகநிலை, ஞானநிலை, தவநிலை ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டவர்கள் சித்தர்கள். இந்த மூன்று நிலையில்தான் அவர்களால் வர்மங்களில் உள்ள உயிர்நிலைகளின் ஓட்டத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. சித்தர்கள் எழுதிய வர்மநூல்களை வெளிநாட்டார் அவர்கள் நாட்டுக்கு எடுத்துச்சென்று அங்கு அக்குபஞ்சர், அக்குபிரஷர் போன்ற சிகிச்சை முறைகளை வளர்த்தனர். ஆனால் நம் நாட்டிலோ வெள்ளையர் ஆட்சியின் காரணமாக இத்தகைய மருத்துவக் கலைகள் வளராமல் ஒடுக்கப்பட்டன. நேரடியாக வெள்ளையராட்சி இல்லாத திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மட்டுமே இக்கலை பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது. 
வர்ம மருத்துவம் மிக சிறந்த மருத்துவமாக விளங்கியதால் அது பழங்காலத்தில் அரசர்கள், அமைச்சர்கள், பிரபுக்கள், தனவந்தர்கள் போன்ற மேட்டுக் குடிவாசிகளுக்குதான் பயன்பட்டு வந்தது. சித்தர்கள் வாழ்ந்த மலைகளையும், குகைகளையும், காடுகளையும் தேடி அரசர்கள் வந்ததுண்டு. அரண்மனைகளில் வர்மக்கலை மருத்துவர்களுக்கு அரச மரியாதை செலுத்தப்பட்டது. அரசமுத்திரை வழங்கப்பட்ட அவர்கள் அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். வர்மக்கலை என்பது இரகசியமான சில குடும்பங்களுக்கு முன் மட்டுமே வைத்து காப்பாற்றப்பட்டது. நமக்கு தெரிந்த எந்தவொரு மன்னனுக்கும் ஊனக்குழந்தை பிறந்ததாக வரலாறு இல்லை. 

Wednesday, 11 July 2018

வர்ம மருத்துவ நூல்களின் பெயர்கள்


  1. வர்மஞான ஒடிவு முறிவு சரசூத்திரம் (எனும்) வர்ம பெருநூல்- 2200
  2. வர்ம ஒடிவு முறிவு சாரி-1500
  3. வர்ம சூடாமணி (எனும்) பஞ்சீகரணப்பின்னல்-1500
  4. ஒடிவு முறிவு சாரி நிகண்டகராதி-1200
  5. வர்ம ஒடிவு முறிவு சரசூத்திரம்-1200
  6. உற்பத்தி நரம்பறை-1500
  7. வர்ம ஒளி-1000
  8. சதுரமணி சூத்திரம்-600
  9. வர்ம கண்ணாடி-500
  10. வர்ம நிதானம்-500
  11. வர்ம அவதி நிதானம்-500
  12. வர்ம மருந்து சூத்திரம்-500
  13. அடிவர்ம சூட்சம்-500
  14. நாலு (மணி) மாத்திரை-400
  15. வாகட நிதானம்-350
  16. வர்ம ஒடிவு முறிவு ஞானம்-300
  17. வில்விசை கை வல்லியம்-300
  18. வர்ம அட்சரக குறள்-300
  19. லாட சூத்திரம்-300
  20. வர்ம லாட சூத்திரம்-300
  21. வர்ம திறவுகோல்-225
  22. நரம்பு பின்னல் சூத்திரம்-205
  23. வர்ம சூத்திரம்-205
  24. வர்மசாரி-205
  25. சிகிச்சை முறிவு சாரி-205
  26. வர்ம நூலேணி-200
  27. வர்ம கலைக்கண்ணாடி சூத்திரம்-200
  28. வர்ம முத்திரை-200
  29. நாலு மாத்திரை-180
  30. நரம்பு சூத்திரம்-150
  31. பீமன் வழி குறுந்தடி சிரமம்-120
  32. வர்ம குருநூல்-130
  33. வர்ம நிரானம்-125
  34. நாலு மாத்திரை-120
  35. சூக்கும சிந்தாமணி-120
  36. தொடு வர்மநிதானம்-110
  37. ஒடிவு முறிவு கட்டுமுறை சாரி-110
  38. பாதாதி கேச வாம ஆணி-108
  39. வர்மகண்டி சாஸ்திரம்-108
  40. வர்ம நரம்பறை-108
  41. வர்ம பீரங்கி-100
  42. வர்மாணி சூத்திரம்-100
  43. வர்ம சூட்சாதி சூட்சம்-100
  44. வர்ம நூல்-100
  45. வர்ம தத்துவ சூடாமணி-100
  46. நரம்பு சூத்திரம்-100
  47. வைத்திய சதகம்-100
  48. வர்ம முடமுறிவு சாரி-100
  49. முறிவு நிதானம்-100
  50. வர்ம தத்துவ சூடாமணி-100
  51. வர்ம வில்லங்க அளவு கோர்வை (எனும்) வர்ம தச்சு சாஸ்திரம்
  52. முறிவுசாரி அடங்கல்-80
  53. வர்ம விதி-67
  54. அகத்தியர் சுவடுமுறை-64
  55. இலாட சூத்திரம்
  56. வர்ம கண்டி-60
  57. ஒடிவு முறிவு கட்டு சூத்திரம்-60
  58. வர்ம சூத்திரம்-60
  59. வர்ம கண்டி-60
  60. வர்ம சூத்திரம்-50
  61. வர்ம நூலளவு சூத்திரம்-50
  62. வர்ம விரலளவு சூத்திரம்-50
  63. வர்ம சூட்ச கைபாக கைவல்லிய நூல்-50
  64. முறிவு கட்டு திறவுகோல்-50
  65. வர்ம வில்லும் விசையும்-50
  66. நாலு மாத்திரை திறவுகோல்-50
  67. வர்ம கைமுறை-36
  68. வர்ம கைமுறை சூட்சம்-36
  69. வர்ம கைவல்லியம்-36
  70. வர்ம சர சூத்திரத் திறவுகோல்-36
  71. தட்டு வர்மநிதானம்-32
  72. உள்சூத்திரம்-32
  73. வர்ம தீர்ப்பு-32
  74. வர்ம அளவு நூல்-30
  75. வர்மகாவியம்-28
  76. உள்ளுர அடங்கல் அடக்கம்-24
  77. பஞ்சசூத்திர அடங்கல்-20
  78. வர்மாணி-16
  79. வர்மபீரங்கி 100-க்கு திறவுகோல்-16
  80. தொடுவர்ம நிதானம்-16
  81. உள்சூத்திரம்-16
  82. வர்மபொறி நாடி திறவுகோல்-16
  83. வர்ம தடவுமுறை-16
  84. வர்மாணி-16
  85. வர்ம கண்டி-16
  86. வர்ம சுரநூல்-16
  87. வர்ம திறவுகோல்-16
  88. பொன்னூசி திறவுகோல்-16
  89. நடசாரி-16
  90. தொடு வர்மத்திறவுகோல்-16
  91. சர்வாங்க அடங்கல் அணி-13
  92. சர்வாங்க அடங்கல் திறவுகோல்-13
  93. துரித இளக்குமுறை அடங்கல் திறவுகோல்-13
  94. வர்ம ஆணித் திறவுகோல்-18
  95. சான்றோர் இரகசியம்-10
  96. வர்ம அசாத்தியம்-10
  97. தட்டு வர்மச்சுவடு-8
  98. மரண கண்டி-6
  99. வர்ம ஆரம்-6
  100. கர்ப்பிணிகள் வர்ம இளக்குமுறை-5
  101. வர்ம கலை கண்ணாடி சூத்திர திறவுகோல்
  102. வர்ம பொன்னூசி திறவுகோல்
  103. வர்ம அங்காதிபாதம்
  104. வர்ம கருநாடி
  105. வர்ம விளக்கம்
  106. பிராண அடக்கம் எனும் வர்ம தெய்வீக அடங்கல்கள்
  107. வர்மமும் எழுப்பு முறையும்
  108. அடுக்கு நிலை போதகம் (வர்ம தற்க சாஸ்திரம்)
  109. சீவோற்பத்தி சிந்தாமணி
  110. வர்ம கைபாக கைவல்லியம் நூல்
  111. மங்கையர் மணி
  112. வர்ம கண்டி (வடக்கன்வழி)

Monday, 9 July 2018

மனித உடலிலுள்ள 96 தத்துவங்களின் பெயர்கள்

1. பரு உடல் (ஸ்தூல) தத்துவங்கள் - 25

  1. பிருதிவு
  2. அப்பு 
  3. தேயு
  4. வாயு
  5. ஆகாயம்
  6. சுரோத்திரம்
  7. தொக்கு
  8. சட்சு
  9. சிங்குவை
  10. ஆக்கிராணம்
  11. சப்தம்
  12. ஸ்பரிசம்
  13. ரூபம்
  14. இரசம்
  15. கந்தம்
  16. வாக்கு
  17. பாதம்
  18. பாணி
  19. பாயுரு
  20. உபத்தம்
  21. வசனம்
  22. கமனம்
  23. தானம்
  24. கழித்தல்
  25. ஆனந்தம்

2. நுண்ணுடல் (சூக்கும) தத்துவங்கள் - 35

  1. மனம்
  2. புத்தி
  3. ஆங்காரம்
  4. சித்தம்
  5. அறிவு
  6. இடகலை
  7. பின்கலை
  8. சுழிமுனை
  9. சிங்குவை
  10. புருடன் (வைரவன்)
  11. காந்தாரி
  12. அத்தி (அசனி)
  13. அலம்புடை
  14. சங்கினி
  15. குகு (குரோதன்)
  16. பிராணன்
  17. அபானன்
  18. வியானன்
  19. உதானன்
  20. சமானன்
  21. நாகன்
  22. கூர்மன்
  23. கிருகரன்
  24. தேவதத்தன்
  25. தனஞ்செயன்
  26. அமர்வாசயம்
  27. பகர்வாசயம்
  28. சலாசயம்
  29. மலாசயம்
  30. சுக்கிலாசயம்
  31. அன்னமய கோசம்
  32. பிராணமய கோசம்
  33. மனோமய கோசம்
  34. விஞ்ஞானமய கோசம்
  35. ஆந்தமய கோசம்

3. காரண உடல் தத்துவங்கள் - 36

  1. மூலாதாரம்
  2. சுவாதிட்டானம்
  3. மணிபூரகம்
  4. அனாகரம்
  5. விசுத்தி
  6. ஆக்கினை
  7. ஆதித்திய மண்டலம்
  8. அக்கினி மண்டலம்
  9. சந்திர மண்டலம்
  10. ஆணவம்
  11. காமியம்
  12. மாயை
  13. வாதம்
  14. பித்தம்
  15. கபம்
  16. அர்த்த ஏடனை
  17. உலக ஏடனை
  18. புத்திர ஏடனை
  19. சத்துவம்
  20. இரசோ
  21. தமோ
  22. நல்வினை
  23. தீவினை
  24. காமம்
  25. குரோதம்
  26. உலோபம்
  27. மோகம்
  28. மதம்
  29. ஆச்சரியம்
  30. இடும்பை
  31. அகங்காரம் (வேகம்)
  32. சாக்கிரம்
  33. சொப்பனம்
  34. சுழுத்தி
  35. துரியம்
  36. துரியாதீதம்

Friday, 6 July 2018

மனித உடலிலுள்ள 96 தத்துவங்கள்


மனித உடல் இயக்கமானது 96 தத்துவங்களைக் கொண்டதாகும். முதல் உடல் பாகமாகிய 25 தத்துவங்கள் பருவுடலாகும் (ஸ்தூல). இரண்டாவது நடு உடல் பாகமாகிய 35 தத்துவங்கள் நுண் உடலாகும் (சூக்கும) இறுதி உடல் பாகமாகிய 36 தத்துவங்கள் காரண உலாகும். இந்த 96 தத்துவங்களும் மனித உடலை இயக்கும் ஒரு கருவிகளாகும், இவற்றின் வகைகளை நன்கு அறிந்தவரே சிறந்த ஆசான் என்பார்கள்.

"சொல்லுவோம் பூதாதி ஓரைந் தாகும்
       சூட்சமாய் பொறிஐந்து புல னைந்து
வெல்லுவோம் கன்மவிந் திரிய மைந்து
       விதமான ஞானவிந் திரிய மைந்து
நல்லுவோம் ணமது நான்கே யாகும்
       நலமான அறிவொன்று நாடி பத்து
அல்லவே தசவாயு பத்து மாகும்
       ஆனதொரு ஆசயமஞ்சு கோச மஞ்சே"

"அஞ்சான ஆதார மாறு மாகும்
       அப்பனே மண்டல மூன்று முலமூன்றாகும்
துஞ்சாத தோடமூன் றீடணை மூன்றி
       தொடர்ந்த குணமூன்றா கும்
தஞ்சமுள்ள வினைரெண்டு ராகமெட்டு
       சார்ந்த தொரு அவஸ்தை அஞ்சு
கொஞ்சாத கருவிதொண் ணூற்றாலும்
       குறிப்பாக ஒவ்வொன்றாய் விவரிப் போமே"
                                                                                       (வர்ம கண்ணாடி - 500)

"ஆச்சுதே தொடுகருவி தொண்ணூற் றாறும்
       அசைந்தாடும் தொடுவர்மம் ஆச்சுதப்பா
வீச்சுதே படுவர்மம் பன்னிரண் டுந்தான்
       விதமான கருவியில் காணார் காணார்
வாச்சுதே இவைகடடி நூற்றெட் டாச்சு
வகையறிந் தோன்றிவா னவனே ஆசான்
                                                                                       (வர்ம பஞ்சீகரணப்பின்னல் - 1500)

Thursday, 5 July 2018

வர்ம மருத்துவத்தின் அளவுமுறைகள்


மனித உடலிலுள்ள வர்ம புள்ளிகளை விரல்களைக் கொண்டுதான் அளந்தார்கள். அதன் அளவு முறைகளை கீழே கொடுத்துள்ளேன். இந்த முறையைப் பயன்படுத்திதான் மனிதனில் உடலின் அளவு முறைகளைக் கணித்தனர்.

2 நெல்லளவு = 1 விரலளவு
12 விரலளவு = 1 சாண்
2 சாண் = 1 முழம்
4 முழம் = 1 மனிதனின் உயரம் (96 விரலளவு )
இறை என்பது பெரு விரலளவு
ஒட்டை என்பது 10 விரலளவு.

1 விரலளவு என்பது ஆள்காட்டி விரலளவு, 4 விரலளவு என்பது ஆள்காட்டி விரல் முதல் சுண்டு விரல் முடிய நான்கு விரல்களையும் சேர்த்து. இறை என்பது கட்டை விரலளவு ஆகும். 1 சாண் என்பது கட்டை விரல் விரிவுப்படுத்தி சுண்டு விரல் நுனிப்பகுதி வரை அளக்கும் அளவே 1 சாண் எனப்படும். சராசரி ஒரு மனிதனின் உயரம் 96 விரல் அளவு.

Wednesday, 4 July 2018

தேரையர் காப்பியம் - வசம்பு


வசம்பு
"வசம்பினைப் பொடித்துமே மதுவினில் வைகலும்
மிசையவே நாப்பிறழ். வேதனை யகலுமே."

பொருள்
வசம்பைப் பொடித்துச் சிட்டிகை அளவு தேனுடன் கலந்து தினந்தோறும் உட்கொண்டு வந்தால் நாப்பிறழ்ச்சி (தெற்றுவாய்) அகன்றுவிடும்.

Tuesday, 3 July 2018

தேரையர் காப்பியம் - வெள்ளைப் பூண்டு


வெள்ளைப் பூண்டு

"வெள்ளுளித் திரிகறி மேற்கையாந் தகரையி
லுள்ளலொன் றுந்தின வுப்பச நோய்கெடும்."

விளக்கம்
வெள்ளைப்பூண்டு, மிளகு, கையாந்தகரையிலை இம்மூன்றும் சம அளவு எடுத்துச் சேர்த்து முறைப்படி உட்கொண்டு வந்தால் வயிறு உப்பிசம், சுவாசகாசம், வீக்கம் நீங்கும்.

Monday, 2 July 2018

தேரையர் காப்பியம் - மிளகு கற்பம்


தேரையர் காப்பியம்
மரிசமொவ் வொன்றொரு வார மட்டதிக
      வரிசையாய்த் தினமும்மோர் மண்டங் காலமே
யுண்டிடு தேசுட னுரமிகு பசியுங்
      கொண்டிடு மதன்பொடி குழைத்து நெய்யுடனே
யுண்டிடத் தொனிதரு மோதுமிப் பொருளொடக்
      காரமுங் குழைத்துணக் கடும்பசி யழலுறும்
பாரிய நோய்களும் பறக்கும தொன்றையுங்
      குடிநீ ரட்டுணக் குலவுமுத் தோடமுங்
கொடும்பிணி யாவும் குடிகெட் டோடுமே.

மிளகு கற்பம்
மிளகை 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் கற்ப முறையில் உண்ணவும். முதல் வாரம், முதல் நாள் 1 மிளகு, இரண்டாவது நாள் 2 மிளகு, மூன்றாவது நாள் 3 மிளகு என்று உயர்த்தி சாப்பிட வேண்டும். மறுவாரத்தில் உயர்த்திய ஏழு எண்ணிலிருந்து குறைத்து அதாவது 7, 6, 5 என குறைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு ஒரு மண்டலம் (48 நாள்) சாப்பிட்டு வந்தால் உடல் ஒளியும், வலிமையும் உண்டாகும். நன்கு பசி ஏற்படும். மேலும் மிளகுப் பொடியை நெய்யுடன் குழைத்து உட்கொண்டு வந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கப் பெற்று குரலினிமையடையும். சிட்டிகை அளவு மிளகுப் பொடியுடன் போதுமான சர்க்கரையை சேர்த்துக்குழைத்து சாப்பிட்டால் கடும் பசி ஏற்படும். பித்தம் சார்பான நோய்கள் நீங்கும். மிளகைக் குடிநீராகக் காய்ச்சிப் பருகி வந்தால் முக் குற்றங்களாகிய வளி, அழல், ஐய நோய்களையும் மற்றும் பல கொடும் பிணிகளையும் தீர்க்கும்.