இது இரும்பு, வங்கம், செம்பு முதலிய மலின உலோகங்களை உயர்ந்த மாற்றுடைய பொன்னாகச் செய்யும் கலையாகும். இதனை, மருந்துப் பொருட்களிலுள்ள வியத்தகு நற்குணங்கள்-காரசார உப்புக்கள், செய நீர், திராவகங்கள் முதலிய இரசாயனப் பொருட்கள்-இரச கந்தக பாடாணங்களைக் கட்டுதல்-தம்பனம்-மாரணம் முதலிய மந்திர அல்லது மாந்தீரீகம்-யோக சக்தியின் வலிமையினாலான மனோதத்துவம் போன்றவற்றின் உதவியால் சாதிக்கலாம். இதில் முழுமை பெற்றவர்கள் வேறெங்கும் கிடையாது.
வாதியானவன் விடாமுயற்சி, தருமசிந்தை, தயாளகுணம், மேலான மனச் சுத்தம் இவற்றோடு, முக்கியமாக தெய்வ பக்தியுள்ளவனாகவும் இருக்க வேண்டும். பேராசையும், பொன்-பொருள்-பணத்தில் ஆசை இருக்கக்கூடாது. மேலும் பிறவியிலேயே சோதிட கிரகங்களின்படி வாதிக்குள் சக்திகள், பூர்வ கருமானுசாரப்படி அமைந்திருக்க வேண்டும். மற்றும் ஒரு சிசு கருத்தரிக்கும்போது பஞ்சபூதங்களின் தொடர்பு எப்படி முக்கியமோ, அதேபோல் வாதம் சித்தியாகவும் அவை கிரமப்படி அமையவேண்டும். இதில் தவறு ஏற்படின் எப்படி கரு சிதைந்துவிடுமோ, அதேபோல் வாதமும் தவறினால் கைகூடாமல் போய்விடும்.
Reference book : Siddha Maruthuva Gurugulam
0 comments:
Post a Comment