உலகத் தோற்றங்களில், மனிதனுக்கு மட்டுமே சகல வித சக்திகளும் உடலினுள் மறைந்துள்ளது. இதனால் மனிதனை இறைவனின் ஆற்றலுக்கு இணையாகவே கூறலாம். ஆயின் இவனோ இச்சக்திகளை சிறிதும் உணராமலும், அவற்றை தன் வயமாக்கிக் கொள்ள முயலாமலும், வழியறியாமலும் பெருங்குற்றம் புரிந்த வனாகின்றனான்.
நமது உடலில் உயிர் நிலைத்திருக்கக் காரணமாகவுள்ள ஆத்மாவுக்கு இவ்விஷயத்தில் - பஞ்சபூதம், ஆறாதாரம், முக்குணம், மூன்றுநாடி, தசவாயு-உள்ளிட்ட 96-தத்துவங்களும் ஆதரவாகவே உள்ளன. ஆயின், மனிதனுக்கு இயற்கையாயுள்ள பூர்ணசக்தி, மாயையினால் மறைக்கப்பட்டு, சரியான பாதையில் செல்லவிடாமல் தடுக்கும். அப்படித் தடுக்காதபடி செய்துவிட்டால், இயற்கை சக்தியானது தனது முழு வலிமையையும் காட்டும். இதனைக் கண்டறிந்து வெல்வதே ஞானமாகும். (அடியிலிருந்து உச்சகட்டம் வரை விளக்கப் பட்டுள்ளதும், நமக்கே உரியதுமான 96-தத்துவங்களை சித்தாந்திகளும், வேதாந்திகளும் ஒப்புக் கொண்டாலும், வேதாந்திகள் இதில் 36-ஐ மட்டும் ஏற்றுக் கொண்டுள்ள நிலை மாறி, மென்மேலும் ஆய்தறிதலின் மூலம் முழுமையாக ஏற்க முன்வரக் கூடும்.)
Reference book : Siddha Maruthuva Gurugulam
Reference book : Siddha Maruthuva Gurugulam

0 comments:
Post a Comment