மனித உறுப்புகள் யாவும் தமது வளர்ச்சிக்கென, தேவையானவற்றை இயற்கை மூலத்தினின்று கிரகித்துக் கொள்கிறது. பேரறிவு உடைய மனிதன்தான் இயற்கைக்கு மாறாக நடந்து, உடல் தோற்றத்தில் மாற்றமில்லாவிடினும் தனது பண்புகளைக் கெடுத்துக் கொள்கிறான். எனவே, இயற்கையில் மனிதனே பிற உயிர்களை விட எளிதில் நோய் வாய்ப்படுகின்றான். தெய்வ அருள் மனிதனின் இயல்பை மாற்றி உடலுக்கு நலமுட்டும்.
குழந்தைகள் யாவும் ஏககாலத்தில் பிறக்குமாயின். அவை ஒரே சமயம் உண்டாவதை, இரட்டைப் பிள்ளைகள் மூலம் அறியலாம். ஆயின், கருவுறுகையில் மட்டும் இவ்விதி பொருந்தாது. காரணம், கரும விதிப்படி தன் உடல் சுபாவத்தில் எது உள்ளதோ, அதையே சொந்தமாகக் கொண்டு பிறத்தலால் வேறுபாடுகள் ஏற்படும்.
மனிதனிடம் உடலின் வெளி அமைப்பு - உள் அமைப்பு என இரு கூறுபாடுகள் உண்டு. முதலாவது தூலமும் - அடுத்தது சூக்குமமும் ஆகும். எனவே, இவற்றை அறிந்து கொண்டால், மூலப் பொருள் வழியாய் நோயையும் - அதனை நீக்கும் முறையையும் எளிதில் புரிந்து கொள்ளலாம். மேலும், மனிதன் தனக்கு இயல்பிலேயே அமைந்த முழுமை சக்தியை, சரியான வழியில் காட்டத் தடுக்கும் மாயையினைக் கடந்து விட்டால், மேற்படி இயற்கை சக்தி தனது முழுமையைக் காட்டத் தொடங்குவதால், யோகிகளைப் போல் அரிய சக்திகளைப் பெறலாம்.
நோய்கள் இயற்கையில் தானே உண்டாகி-பிறகு தானே விலகும். எனவே, மருத்துவன் இவ்வியற்கையின் போக்கை அறிய வேண்டும். இதனை அறிந்தவனே மனித உடலைமப்பின் கூறுபாடுகளையும் அறிந்தவனாவான். வைத்தியத்தில் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருப்பினும், சோதிட அனுபவமில்லாவிடில் பயனில்லை. மேலும் பஞ்சபூதங்களின் பஞ்சீகரண சக்தியை அறிந்தவனால் மட்டுமே ஒரு உலோகத்தை வேறொரு உலோகமாக மாற்றவியலும். காரணம், உலகின் யாவுமே ஆதிமூலத்தினின்று தோன்றியதே தவிர - ஏகம், கூட்டு என்ற பிரிவினையே கிடையாது. யாவும் ஒன்றிலொன்றின் கலப்பேயாகும். ஆத்துமா ஒன்று மட்டுமே ஏகமாகும்.
Reference book : Siddha Maruthuva Gurugulam

0 comments:
Post a Comment