Tuesday, 20 March 2018

3. யோகம் (தியானம்-ஒடுக்கம்)


மாந்தருக்கு இயற்கையிலே உள்ள காந்தசக்தியினால்-பிராணாயாமத்தினால் விளைந்த வலிமையினால் இவ்வுலகையே தன் வயமாக்கி, தன் ஆளுகைக் குட்படுத்தவியலும் யோகப்பயிற்சி மட்டுமே பிறப்பிறப்பை வெகு விரைவிலும், சுருக்கமாகவும் முடித்துக் கொள்ள குறுக்கு வழியாகும். இதனை, ஒரு குரு இருந்து தொட்டுக்காட்டாவிடில் உடல் நலம் கெடும். இதில், தூய மனமே ஒரு கருவாக தன்னுள் நின்று வழி காட்டும். அதாவது, இறை வணக்கம் மேலோங்க தன்னைத்தானறியும் அறிவு விளக்கமும் மிகுதியாகி, அப்படி உயர்நிலை பெற்ற மனமே குருவாக நிற்கும். குண்டலினிக்குள் வலிவும், நரம்பு சக்தியும் தக்கபடி இல்லாவிடில் உடலில் குருதி ஓட்டமிராது, இருதயம் துடிக்காது, நுரையீரல் இயங்காது, இதர உறுப்புகளும் தமது செயலைப் புரியாது. 

ஒரு யோகியால் பஞ்சபூதங்களை அடக்கி, இயற்கை பேதங்களை மாற்றவியலும், தோற்றங்களுள் எவ்வித வடிவும் பெறலாம். தனது உடலையே போக்கவும், மீண்டும் ஆக்கவும் செய்யலாம். பரகாயப் பிரவேசமாகிய, பிறர் உடலினுள் புகுந்து விடலாம். பிணத்தில் கூடப்புகுந்து, அவ்வுடலோடு எழுந்து நடமாடலாம். புதிதாகவே மனிதரையும், மனதையும், செயல்களையும் உண்டுபண்ணலாம்.

Reference book : Siddha Maruthuva Gurugulam

0 comments:

Post a Comment