Thursday, 22 March 2018

சித்தர்களது காலம் ஆதியாகும்



முதல் நிலம் தில்லை ஆகும். இங்ஙனமே, மண்-தஞ்சை (பிரகதீசன்) நீர் -திருவாணைக் காவல் (சம்புகேசன்), நெருப்பு - திருவண்ணாமலை (சோதீசன்), காற்று - திருக்குற்றாலம் (குற்றாலவாயன்), வெளி - தில்லை (சித்சபேசன்) ஆகியன ஐம்பெரும் இடங்களாகும்.

சமயம்
கடவுள், உயிர், உலகம், யாக்கை பிறவி, முக்தி, இன்பம் மற்றும் இதன் வகை தொகை வழியாகும். வழி - மூலத்தோர், நாதத்தோர், பெளத்தரும், சமனரும் ஆவர்.

வழிபாடு
சக்தி வழிபாடு, பூரணவழிபாடு, மோனவழிபாடு, சோதிவழிபாடு, மெய்வழிபாடு ஆகியனவாகும். (ஊமை, குருடன், செவிடன், முடவன், நொண்டி இவர்கள் வணங்கும் ஒரே வழிபாடு), தொகை - நவகோடியாகும் (சிறப்புடையோர் பதினெண்மராவர்)

பஞ்சவதிக்கு அருகில் இராமர் சந்தித்ததாகக் கூறப்படும் அகஸ்தியர் முதலாவது அகஸ்தியரல்ல. எனவே அவர் சித்தர் கல்வியைச் சார்ந்தவர் என்பது கட்டுக் கதையாகும். மேலும் அவர் வடபுலத்தைச் சார்ந்த பெரிய இருடி என்பதே ஐயத்திற்குரியதாகும். ஆகவே, வெவ்வேறு காலத்திலும் - இடத்திலும், அகஸ்தியர் என்ற பெயரில் பலர் இருந்துள்ளது புரியும் - புராணங்களில் வரும் அகஸ்தியர்கள் அனைவரும் ஒருவரே எனவும் - அவர்தான் மருத்துவம், மந்திரம், வேதை உட்பட பலவற்றையும் இயற்றினார் எனவும் கூறுவது முற்றிலும் தவறாகும். எனவே ஆதி அகத்தியரின் அல்லது மற்ற சித்தர்களின் மூல நூற்களின்று - அவர்களது வழி முறையினரால் பதியப்பெற்று, யாவும் அகத்தியர் பெயரிலேயே வெளியானவை என்பதே உண்மை. இதை முற்றிலும் கண்டறிவது என்பது சிரமமேயாகும். ஆயினும், உண்மையான, முதன்முதலான தமிழ் அகத்தியரும் - பிற்கால ஆரிய அகஸ்தியர்களும் முற்றிலும் வெவ்வேறாகும் என்பதை என்றும் மறக்கலாகாது.



Reference book : Siddha Maruthuva Gurugulam

0 comments:

Post a Comment