- வாயு சம்மந்தமான உணவுகளை தவிர்க்கவும் (உதாரணமாக. உருளைக்கிழங்கு, முள்ளங்கி, தக்காளி, கருவாடு, ஐஸ்கிரீம், ஐஸ்வாட்டர் மற்றும் உடம்பு ஒத்துக்கொள்ளாத சில உணவு வகைகள்.
- கர்ப்ப காலங்களில் காமம், குரோதம், மோகம், பயம், கோபம் போன்றவைகள் இருக்கக்கூடாது.
- ஆண்-பெண் சேர்க்கையின் போது பெண் ஈரத்தலையோடு இருக்கக்கூடாது, மற்றும் இரவரும் மலம், ஜலம் கழியாமல் அடக்கிக்கொண்டு ஒன்று சேர்தல் கூடாது.
Thursday, 6 December 2018
இது தெரிந்தால் போதும் உங்கள் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்
Thursday, 12 July 2018
சித்தர்கள் உருவாக்கிய வர்ம மருத்துவத்தின் விளக்கம்
சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவம் ஆகும். சித்தர்கள் தங்கள் ஞான அறிவின் பயனாக உருவாக்கிய மருத்துவமாகும். இந்த மருத்துவம் ஒவ்வொரு இடத்திற்கேற்ப தட்பவெப்ப நிலையில் கிடைக்கக்கூடிய எண்ணற்ற புல்பூண்டுகள், செடிகொடிகள், பழங்கள், விதைகள், பிசின்கள், வேர்கள் ஆகியவற்றைக் கொண்டு தைலங்கள், கஷாயங்கள், செந்தூர பஸ்பங்கள் போன்றவற்றைக் கண்டுபிடித்து நோய்களை சிகிச்சை அளிக்கும் முறையே சித்த மருத்துவம். அதன்பின் வர்மத்தின் மீது தங்கள் கவனத்தை அதிகம் செலுத்தினர். அதாவது உடம்பைத் தொட்டுப்பார்த்து சிகிச்சையளிக்கும் முறையை உருவாக்கினர். அதுதான் வர்மக் கலை.
வர்மக்கலைக் கற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபடடவர்களாக, அசாதரண சக்தி பெற்றவர்களாக ஆக்குகிறது. யோகநிலை, ஞானநிலை, தவநிலை ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டவர்கள் சித்தர்கள். இந்த மூன்று நிலையில்தான் அவர்களால் வர்மங்களில் உள்ள உயிர்நிலைகளின் ஓட்டத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. சித்தர்கள் எழுதிய வர்மநூல்களை வெளிநாட்டார் அவர்கள் நாட்டுக்கு எடுத்துச்சென்று அங்கு அக்குபஞ்சர், அக்குபிரஷர் போன்ற சிகிச்சை முறைகளை வளர்த்தனர். ஆனால் நம் நாட்டிலோ வெள்ளையர் ஆட்சியின் காரணமாக இத்தகைய மருத்துவக் கலைகள் வளராமல் ஒடுக்கப்பட்டன. நேரடியாக வெள்ளையராட்சி இல்லாத திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மட்டுமே இக்கலை பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது.
வர்ம மருத்துவம் மிக சிறந்த மருத்துவமாக விளங்கியதால் அது பழங்காலத்தில் அரசர்கள், அமைச்சர்கள், பிரபுக்கள், தனவந்தர்கள் போன்ற மேட்டுக் குடிவாசிகளுக்குதான் பயன்பட்டு வந்தது. சித்தர்கள் வாழ்ந்த மலைகளையும், குகைகளையும், காடுகளையும் தேடி அரசர்கள் வந்ததுண்டு. அரண்மனைகளில் வர்மக்கலை மருத்துவர்களுக்கு அரச மரியாதை செலுத்தப்பட்டது. அரசமுத்திரை வழங்கப்பட்ட அவர்கள் அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். வர்மக்கலை என்பது இரகசியமான சில குடும்பங்களுக்கு முன் மட்டுமே வைத்து காப்பாற்றப்பட்டது. நமக்கு தெரிந்த எந்தவொரு மன்னனுக்கும் ஊனக்குழந்தை பிறந்ததாக வரலாறு இல்லை.
Wednesday, 11 July 2018
வர்ம மருத்துவ நூல்களின் பெயர்கள்
- வர்மஞான ஒடிவு முறிவு சரசூத்திரம் (எனும்) வர்ம பெருநூல்- 2200
- வர்ம ஒடிவு முறிவு சாரி-1500
- வர்ம சூடாமணி (எனும்) பஞ்சீகரணப்பின்னல்-1500
- ஒடிவு முறிவு சாரி நிகண்டகராதி-1200
- வர்ம ஒடிவு முறிவு சரசூத்திரம்-1200
- உற்பத்தி நரம்பறை-1500
- வர்ம ஒளி-1000
- சதுரமணி சூத்திரம்-600
- வர்ம கண்ணாடி-500
- வர்ம நிதானம்-500
- வர்ம அவதி நிதானம்-500
- வர்ம மருந்து சூத்திரம்-500
- அடிவர்ம சூட்சம்-500
- நாலு (மணி) மாத்திரை-400
- வாகட நிதானம்-350
- வர்ம ஒடிவு முறிவு ஞானம்-300
- வில்விசை கை வல்லியம்-300
- வர்ம அட்சரக குறள்-300
- லாட சூத்திரம்-300
- வர்ம லாட சூத்திரம்-300
- வர்ம திறவுகோல்-225
- நரம்பு பின்னல் சூத்திரம்-205
- வர்ம சூத்திரம்-205
- வர்மசாரி-205
- சிகிச்சை முறிவு சாரி-205
- வர்ம நூலேணி-200
- வர்ம கலைக்கண்ணாடி சூத்திரம்-200
- வர்ம முத்திரை-200
- நாலு மாத்திரை-180
- நரம்பு சூத்திரம்-150
- பீமன் வழி குறுந்தடி சிரமம்-120
- வர்ம குருநூல்-130
- வர்ம நிரானம்-125
- நாலு மாத்திரை-120
- சூக்கும சிந்தாமணி-120
- தொடு வர்மநிதானம்-110
- ஒடிவு முறிவு கட்டுமுறை சாரி-110
- பாதாதி கேச வாம ஆணி-108
- வர்மகண்டி சாஸ்திரம்-108
- வர்ம நரம்பறை-108
- வர்ம பீரங்கி-100
- வர்மாணி சூத்திரம்-100
- வர்ம சூட்சாதி சூட்சம்-100
- வர்ம நூல்-100
- வர்ம தத்துவ சூடாமணி-100
- நரம்பு சூத்திரம்-100
- வைத்திய சதகம்-100
- வர்ம முடமுறிவு சாரி-100
- முறிவு நிதானம்-100
- வர்ம தத்துவ சூடாமணி-100
- வர்ம வில்லங்க அளவு கோர்வை (எனும்) வர்ம தச்சு சாஸ்திரம்
- முறிவுசாரி அடங்கல்-80
- வர்ம விதி-67
- அகத்தியர் சுவடுமுறை-64
- இலாட சூத்திரம்
- வர்ம கண்டி-60
- ஒடிவு முறிவு கட்டு சூத்திரம்-60
- வர்ம சூத்திரம்-60
- வர்ம கண்டி-60
- வர்ம சூத்திரம்-50
- வர்ம நூலளவு சூத்திரம்-50
- வர்ம விரலளவு சூத்திரம்-50
- வர்ம சூட்ச கைபாக கைவல்லிய நூல்-50
- முறிவு கட்டு திறவுகோல்-50
- வர்ம வில்லும் விசையும்-50
- நாலு மாத்திரை திறவுகோல்-50
- வர்ம கைமுறை-36
- வர்ம கைமுறை சூட்சம்-36
- வர்ம கைவல்லியம்-36
- வர்ம சர சூத்திரத் திறவுகோல்-36
- தட்டு வர்மநிதானம்-32
- உள்சூத்திரம்-32
- வர்ம தீர்ப்பு-32
- வர்ம அளவு நூல்-30
- வர்மகாவியம்-28
- உள்ளுர அடங்கல் அடக்கம்-24
- பஞ்சசூத்திர அடங்கல்-20
- வர்மாணி-16
- வர்மபீரங்கி 100-க்கு திறவுகோல்-16
- தொடுவர்ம நிதானம்-16
- உள்சூத்திரம்-16
- வர்மபொறி நாடி திறவுகோல்-16
- வர்ம தடவுமுறை-16
- வர்மாணி-16
- வர்ம கண்டி-16
- வர்ம சுரநூல்-16
- வர்ம திறவுகோல்-16
- பொன்னூசி திறவுகோல்-16
- நடசாரி-16
- தொடு வர்மத்திறவுகோல்-16
- சர்வாங்க அடங்கல் அணி-13
- சர்வாங்க அடங்கல் திறவுகோல்-13
- துரித இளக்குமுறை அடங்கல் திறவுகோல்-13
- வர்ம ஆணித் திறவுகோல்-18
- சான்றோர் இரகசியம்-10
- வர்ம அசாத்தியம்-10
- தட்டு வர்மச்சுவடு-8
- மரண கண்டி-6
- வர்ம ஆரம்-6
- கர்ப்பிணிகள் வர்ம இளக்குமுறை-5
- வர்ம கலை கண்ணாடி சூத்திர திறவுகோல்
- வர்ம பொன்னூசி திறவுகோல்
- வர்ம அங்காதிபாதம்
- வர்ம கருநாடி
- வர்ம விளக்கம்
- பிராண அடக்கம் எனும் வர்ம தெய்வீக அடங்கல்கள்
- வர்மமும் எழுப்பு முறையும்
- அடுக்கு நிலை போதகம் (வர்ம தற்க சாஸ்திரம்)
- சீவோற்பத்தி சிந்தாமணி
- வர்ம கைபாக கைவல்லியம் நூல்
- மங்கையர் மணி
- வர்ம கண்டி (வடக்கன்வழி)
Monday, 9 July 2018
மனித உடலிலுள்ள 96 தத்துவங்களின் பெயர்கள்
1. பரு உடல் (ஸ்தூல) தத்துவங்கள் - 25
2. நுண்ணுடல் (சூக்கும) தத்துவங்கள் - 35
3. காரண உடல் தத்துவங்கள் - 36
- பிருதிவு
- அப்பு
- தேயு
- வாயு
- ஆகாயம்
- சுரோத்திரம்
- தொக்கு
- சட்சு
- சிங்குவை
- ஆக்கிராணம்
- சப்தம்
- ஸ்பரிசம்
- ரூபம்
- இரசம்
- கந்தம்
- வாக்கு
- பாதம்
- பாணி
- பாயுரு
- உபத்தம்
- வசனம்
- கமனம்
- தானம்
- கழித்தல்
- ஆனந்தம்
2. நுண்ணுடல் (சூக்கும) தத்துவங்கள் - 35
- மனம்
- புத்தி
- ஆங்காரம்
- சித்தம்
- அறிவு
- இடகலை
- பின்கலை
- சுழிமுனை
- சிங்குவை
- புருடன் (வைரவன்)
- காந்தாரி
- அத்தி (அசனி)
- அலம்புடை
- சங்கினி
- குகு (குரோதன்)
- பிராணன்
- அபானன்
- வியானன்
- உதானன்
- சமானன்
- நாகன்
- கூர்மன்
- கிருகரன்
- தேவதத்தன்
- தனஞ்செயன்
- அமர்வாசயம்
- பகர்வாசயம்
- சலாசயம்
- மலாசயம்
- சுக்கிலாசயம்
- அன்னமய கோசம்
- பிராணமய கோசம்
- மனோமய கோசம்
- விஞ்ஞானமய கோசம்
- ஆந்தமய கோசம்
3. காரண உடல் தத்துவங்கள் - 36
- மூலாதாரம்
- சுவாதிட்டானம்
- மணிபூரகம்
- அனாகரம்
- விசுத்தி
- ஆக்கினை
- ஆதித்திய மண்டலம்
- அக்கினி மண்டலம்
- சந்திர மண்டலம்
- ஆணவம்
- காமியம்
- மாயை
- வாதம்
- பித்தம்
- கபம்
- அர்த்த ஏடனை
- உலக ஏடனை
- புத்திர ஏடனை
- சத்துவம்
- இரசோ
- தமோ
- நல்வினை
- தீவினை
- காமம்
- குரோதம்
- உலோபம்
- மோகம்
- மதம்
- ஆச்சரியம்
- இடும்பை
- அகங்காரம் (வேகம்)
- சாக்கிரம்
- சொப்பனம்
- சுழுத்தி
- துரியம்
- துரியாதீதம்
Friday, 6 July 2018
மனித உடலிலுள்ள 96 தத்துவங்கள்
மனித உடல் இயக்கமானது 96 தத்துவங்களைக்
கொண்டதாகும். முதல் உடல் பாகமாகிய
25 தத்துவங்கள் பருவுடலாகும் (ஸ்தூல). இரண்டாவது நடு
உடல் பாகமாகிய 35 தத்துவங்கள் நுண் உடலாகும் (சூக்கும)
இறுதி உடல் பாகமாகிய 36 தத்துவங்கள்
காரண உலாகும். இந்த 96 தத்துவங்களும் மனித
உடலை இயக்கும் ஒரு கருவிகளாகும், இவற்றின்
வகைகளை நன்கு அறிந்தவரே சிறந்த
ஆசான் என்பார்கள்.
"சொல்லுவோம்
பூதாதி ஓரைந் தாகும்
சூட்சமாய்
பொறிஐந்து புல னைந்து
வெல்லுவோம்
கன்மவிந் திரிய மைந்து
விதமான
ஞானவிந் திரிய மைந்து
நல்லுவோம்
கரணமது நான்கே யாகும்
நலமான அறிவொன்று நாடி பத்து
அல்லவே
தசவாயு பத்து மாகும்
ஆனதொரு
ஆசயமஞ்சு கோச மஞ்சே"
"அஞ்சான
ஆதார மாறு மாகும்
அப்பனே
மண்டல மூன்று முலமூன்றாகும்
துஞ்சாத
தோடமூன் றீடணை மூன்றி
தொடர்ந்த
குணமூன்றா கும்
தஞ்சமுள்ள
வினைரெண்டு ராகமெட்டு
சார்ந்த
தொரு அவஸ்தை அஞ்சு
கொஞ்சாத
கருவிதொண் ணூற்றாலும்
குறிப்பாக
ஒவ்வொன்றாய் விவரிப் போமே"
(வர்ம கண்ணாடி - 500)
"ஆச்சுதே
தொடுகருவி தொண்ணூற் றாறும்
அசைந்தாடும்
தொடுவர்மம் ஆச்சுதப்பா
வீச்சுதே
படுவர்மம் பன்னிரண் டுந்தான்
விதமான
கருவியில் காணார் காணார்
வாச்சுதே
இவைகடடி நூற்றெட் டாச்சு
வகையறிந்
தோன்றிவா னவனே ஆசான்
(வர்ம பஞ்சீகரணப்பின்னல் - 1500)
Thursday, 5 July 2018
வர்ம மருத்துவத்தின் அளவுமுறைகள்
2 நெல்லளவு = 1 விரலளவு
12 விரலளவு = 1 சாண்
2 சாண் = 1 முழம்
4 முழம் = 1 மனிதனின் உயரம் (96 விரலளவு )
இறை என்பது பெரு விரலளவு
ஒட்டை என்பது 10 விரலளவு.
1 விரலளவு என்பது ஆள்காட்டி விரலளவு, 4 விரலளவு என்பது ஆள்காட்டி விரல் முதல் சுண்டு விரல் முடிய நான்கு விரல்களையும் சேர்த்து. இறை என்பது கட்டை விரலளவு ஆகும். 1 சாண் என்பது கட்டை விரல் விரிவுப்படுத்தி சுண்டு விரல் நுனிப்பகுதி வரை அளக்கும் அளவே 1 சாண் எனப்படும். சராசரி ஒரு மனிதனின் உயரம் 96 விரல் அளவு.
Wednesday, 4 July 2018
Tuesday, 3 July 2018
Monday, 2 July 2018
தேரையர் காப்பியம் - மிளகு கற்பம்
மரிசமொவ் வொன்றொரு வார மட்டதிக
வரிசையாய்த் தினமும்மோர் மண்டங் காலமே
யுண்டிடு தேசுட னுரமிகு பசியுங்
கொண்டிடு மதன்பொடி குழைத்து நெய்யுடனே
யுண்டிடத் தொனிதரு மோதுமிப் பொருளொடக்
காரமுங் குழைத்துணக் கடும்பசி யழலுறும்
பாரிய நோய்களும் பறக்கும தொன்றையுங்
குடிநீ ரட்டுணக் குலவுமுத் தோடமுங்
கொடும்பிணி யாவும் குடிகெட் டோடுமே.
மிளகு கற்பம்
மிளகை 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் கற்ப முறையில் உண்ணவும். முதல் வாரம், முதல் நாள் 1 மிளகு, இரண்டாவது நாள் 2 மிளகு, மூன்றாவது நாள் 3 மிளகு என்று உயர்த்தி சாப்பிட வேண்டும். மறுவாரத்தில் உயர்த்திய ஏழு எண்ணிலிருந்து குறைத்து அதாவது 7, 6, 5 என குறைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு ஒரு மண்டலம் (48 நாள்) சாப்பிட்டு வந்தால் உடல் ஒளியும், வலிமையும் உண்டாகும். நன்கு பசி ஏற்படும். மேலும் மிளகுப் பொடியை நெய்யுடன் குழைத்து உட்கொண்டு வந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கப் பெற்று குரலினிமையடையும். சிட்டிகை அளவு மிளகுப் பொடியுடன் போதுமான சர்க்கரையை சேர்த்துக்குழைத்து சாப்பிட்டால் கடும் பசி ஏற்படும். பித்தம் சார்பான நோய்கள் நீங்கும். மிளகைக் குடிநீராகக் காய்ச்சிப் பருகி வந்தால் முக் குற்றங்களாகிய வளி, அழல், ஐய நோய்களையும் மற்றும் பல கொடும் பிணிகளையும் தீர்க்கும்.
Thursday, 19 April 2018
உடல் பருமன் குறைக்க
தக்காளிச்சாறு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு இவைகளை 50 மி.லி. சரிசமமாக சாறை எடுத்து இனிப்பு சேர்க்காமல் (சர்க்கரை - முடிந்தால் பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்) காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இப்படி 15 நாட்கள் தொடர்ந்து பருகி வந்தால் உடல் பருமன் விரைவாக குறைந்துவிடும்.
ஆமணக்கு வேரை எடுத்து நிழலில் காய வைத்துப் பதப்படுத்த வேண்டும். பிறகு பதப்படுத்தப்பட்ட ஆமணக்கு வேரை 50 கிராம் எடுத்து நன்றாக பொடியாக இடித்துக்கொள்ள வேண்டும். பொடி செய்த தூளை 250 மி.லி. தண்ணீரில் இரவு ஊற வைத்து அதை மறுநாள் காலையில் எடுத்து நன்கு கசக்கிப் பிழிந்து வடிக்கட்டி எடுக்க வேண்டும். பிறகு அந்த சாற்றில் தேவையான அளவு தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருக உடல் பருமன் குறையும்.
Monday, 16 April 2018
திராவிடக் கலாச்சாரம் மற்றும் விபரங்கள்
இவை முற்றிலும் இனிய செந்தமிழ்க் குலத்திற்கே உரியது என்பது உறுதி. இவற்றிலுள்ள உயர் தனித் தமிழின் செய்யுள் நடைபோல் சாதாரணமானவர்களால் எழுதிவிட முடியாது. சித்தர் நூற்களில் மட்டுமே - பிற நூற்களில் கண்டும், கேட்டுமிராத அரிய விபரங்களைக் காணவியலும். ஆயின் அவர்களது நூற்களை முழுமையாகப் படித்தாலன்றி அவர்களது பரிபாசைச் சொற்களின் உட்பொருளும் - இரகசியமும் புரியாது. உலகினரின் பொன்னாசையைக் கருதியே வாத முறையில் பல விபரங்களை வெகு தந்திரமாகக் கூறியுள்ளனர். சித்த முறை உலகின் நன்மைக்காக எழுதப்பட்டுள்ளதால், இதனை பணம் ஈட்ட மட்டுமே மற்றும் வெறும் வியாபாரமாகக் கையாண்டால் சித்தர்களது சாபம் வந்து சேரும் எனக் கருதப்படுகிறது. எனவே தான் - வாதிமகன் வைத்தியன் என்பதற்கேற்ப - மருத்துவத்தில் ஈடுபடும் முன்னரே, பிறர் உதவியின்றி வாழவும், நோயாளியிடமிருந்து பணத்தை எதிர்பாராமல் பணியாற்றவும் வாதமுறையிலும் தேர்ச்சிபெற வேண்டுமெனக் கூறப்படும். சித்த முறையில் கண்ட மனக் கோட்பாடு, ஞானம் இவற்றை - மருத்துவன் உண்மை, ஒழுங்கு, நியாயம், கட்டுப்பாடு ஆகிய வழிகளில் புகட்டுவதற்காகவே நூற்களில் கூறியுள்ளனர். எனவே, இவை சித்த மருத்துவத்திற்கு ஆதரவு தரும் அடிக்கற்களாகக் கூறப்படும்.
சித்தர் நூற்களிலுள்ள பாடல்கள், கவியின் வல்லமையுடன் - இலக்கணம் பிறழாமல், செய்யுள்களை தேவைக்கேற்ப அவற்றின் கருத்து மாறாமலே மாற்றவும், திருத்தவும், யாப்புக்குப் பொருத்தமாகப் பாடும்போது அடிகளின் சீரை அதற்கிணங்கச் செய்யும் வழி வகுக்கப்பட்டுள்ளது. மருத்துவம் தொடர்பான மிக நுண்ணிய விபரங்களுடன், இதர பல தத்துவங்களும் தவிர - பிற முறைகளில் உள்ளது போன்று கட்டுக்கதைகள் இவற்றில் இல்லை. சில நூற்கள் உயர்வான இலக்கண நடையிலும் - மறைமொழிச் சொற்கள் மிகுந்தும் காணப்படினும் புலமை வாய்ந்தவர்களுக்கு புரிந்து கொள்வது கடினமல்ல ஆரியர் - அரேபியர் - கிரேக்கர் - ரோமானியர் தொடங்கி, நவீன முறையின் பல ஆய்வுகள் உட்பட பெரும்பாலோரது நூற்களுக்கு வழிகாட்டலும், அடிப்படையும் அருந்தமிழ்ச் சித்தர்களது மூல நூற்களே காரணமாகும். ஆரியரின் வருகைக்குப்பின், சில பிற்கால சித்தர் நூற்களில் வடமொழிச் சொற்களும் இடையிடைய கலந்து மூல நூற்களுக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டனர்.
Reference book : Siddha Maruthuva Gurugulam
Saturday, 14 April 2018
சித்தர்களின் நூற்களும் - கல்வியும்
சித்தர் நூற்களின் சிறப்பு
சித்த மருத்துவ நூற்கள் உலகின் மற்ற மருத்துவ நூற்களைவிட முற்றிலும் மாறுபட்டதும் - நூதனமானவையுமாகும். காரணம், இதில் வைத்தியத்தோடு வாதம்-யோகம்-ஞானம்-மாந்திரீகம்-சோதிடம் முதலியனவும் கலந்துள்ளன. எனவே, மிக விரிவான ஆதாரங்களைக் கொண்டதாகும். சித்தர்களுள்-போகர், புலிப்பாணி, இராமதேவர் முதலிய சிலரைத் தவிர-பெரும்பாலோர் தமிழர்களேயாதலால், இம்முறை தமிழத்திற்கே உரியதாகும். எனவேதான் இந்நூற்கள் தமிழில் மட்டுமே கூறப்பட்டுள்ளன. மேலும், ஆயுள்வேதம் ஆரியரின் தெய்வ அருளைக் குறிப்பது போல்-சித்த முறையும் சிவசக்தியின் கருணையால் ஆக்கப்பட்டதாகும். பண்டைய நாகரிகத்தில், இது பல சித்திகளைப் பெற்றுள்ளது. சகல தந்திர-வித்தை நூற்களிலும் சித்தர்கள் கண்ட அறிவும்-திறனும் அபாரமானது. அவர்கள், மருத்துவத்தைக் கையாண்ட சமயம் பொற்காலமாகும். சித்தர் நூற்களிலுள்ளவை பற்றிய வினாக்களுக்கு விடையளிப்பது எளிதல்ல. இவை, சித்தர்கள் ஆன்ம சக்தியைப் பெற்றபின்-சகலத்தையும் மிகத்தெளிவாக அறிந்த பின், ஞானவிளக்க அறிவால், உண்மையின் அடிப்படையில், அனுபவரீதியாக அருளப் பெற்றவையாகும். எனவே, ஒருமித்த மனதோடு, கடும் முயற்சியுடன் கற்றாலன்றி இவற்றின் பல கருத்துக்கள் புரியாது - ஒரு இரகசியமான கலையாகவே தோன்றும்.
Reference book : Siddha Maruthuva Gurugulam
Friday, 13 April 2018
சித்தர்களின் இலிங்க பூசையின் தத்துவம்
சித்தர்களின் கொள்கைப்படி, ஈசனை (உயிரை) வணங்குவது - சிவபூசை எனவும், ஈசுவரியை (வலிமையை) வணங்குவது - சக்தி பூசை எனவும், இருவரையும் ஒருங்கே வணங்குவது சிவசக்திபூசை எனவும் கூறப்படும். உலகின் அனைத்துத் தோற்றத்திற்கும் - இயக்கதிற்கும் ஆதாரமாகவுள்ளது. விந்து-நாதமே என்ற தத்துவத்தைக் குறிப்பதற்கே, ஆண்-பெண் குறிகளின் இணைப்புத் தோற்றமாக இலிங்கம் வடிவமைக்கபட்டுள்ளது. இலிங்கம்-கல்லினால் குழவியைப்போல் செய்து மேற்பக்கம் உருண்டையாகவும், அடிப்புறம் யோனியென்ற பீடத்தில் பொருந்தியதாயுமிருக்கும். எனவே, இலிங்க பூசையிலேயே, சக்தி பூசையும், அடங்கியுள்ளது. ஆண், பெண் இரண்டையும் குறிப்பதாகிய இதனை ஆவுடையார் எனவும் கூறப்படும். மேலே, நீண்ட இலிங்கமும், அதனைத் தாங்குவதாகிய யோனிவட்ட வடிவினாலான சக்திபீடமும் அடங்கிய இவற்றையே, சிவாலயங்களின் மூலஸ்தானத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பஞ்சபூதங்களையும் குறிக்கக் கூடிய இலிங்கமானது, ஆதார-பிராண-சிவ-மூல-பார்த்திவ-பாதாள-ஆவுடையார் இலிங்கங்கள் எனப் பலவகையாகக் கூறப்படும். ஆயின், ஆகமவிதிப்படி ஐவகையாகக் கொள்ளப்படும். அவை
- பெண்லிங்கம் - இது, இருபாலரின் குறியும் இணந்தது. இது பொது வழிபாட்டிற்கும் முதல் நிலையாகிய சரியைக்கும் உரியது.
- பூலிங்கம் - இது, ஆண்லிங்கமாகும், இது, உண்மை, சக்தியைக் கண்டறிய வழிபடும், இரண்டாம் நிலையான கிரியையின் தொடக்கத்திற்கு உரியது.
- நபும்சக லிங்கம் - இது, இரண்டிலும் சேராது. இது, இருண்ட நடுநிலையான, மற்றும் கிரியை வெற்றி பெறும் நிலையிலுள்ள வழிபாடாகும்.
- பரம லிங்கம் - இது மிக உயர்ந்த அல்லது மறைப்பு லிங்கமாகும். இது, மூன்றாம் நிலையான யோக வழிபாட்டிற்குரியது.
- மகா லிங்கம் - இது, அறிவு ஒளியானது. இது, பிறப்பை மறுத்து, பரம் பொருளை அடைவதற்குரிய நான்காம் நிலையான ஞான வழிபாட்டிற்குரியது.
இவ்வகை, இலிங்கங்களையும் பஞ்சபூதங்களின் அடிப்படையில் பிரித்து, பின் வரும் இடங்களில் நிர்மாணித்துள்ளனர். அவை, பிருதிவி லிங்கம் - காஞ்சிபுரம், அப்பு லிங்கம் - சம்புகேசுவரம் (திருவானைக்காவல்), தேயுலிங்கம் - திருவண்ணாமலை, வாயுலிங்கம்-காளத்தி, ஆகாயலிங்கம் - சிதம்பரம் (சிதம்பர ரகசியம்) ஆகியனவாகும். இவ்வகை இலிங்க வழிபாடு யாவுமே, சீவ-சக்தியின் வலிமையையும், உண்மையையும் உலகிற்கு உணர்த்துவதற்கும், மேனிலையை அடைய வழிகாட்டுவதற்கும் வகுக்கப்பட்டவையே தவிர வேறில்லை. வினாயகர் உருவ அமைப்பிலும், ''ஓம்'' என்ற எழுத்தின் வடிவிலும் உள்ள சூக்குமமும் இதுவேயாகும்.
Reference book : Siddha Maruthuva Gurugulam
Thursday, 12 April 2018
சித்தர்களின் முக்குற்றக்கொள்கை
சித்தர்களால் கண்டறியப்பட்ட - மனித உடலிலுள்ள வாதம் (காற்று), பித்தம் (வெப்பம்), கபம் (குளிச்சி) இவற்றின் தொழில்களைக் குறிப்பதாகும், இது, தொழிலையும், அதன் தன்மையையும் குறிக்கும். இதனால், சிகிச்சை முறைகளையும் அறியலாம். 64 - உடற்தத்துவங்களாகிய, இக்கருவி கரணாதிகள் அந்தக் காரணங்களையும், ஆன்ம போதத்தையும் அல்லது இரண்டையும் குறிக்கும். அதாவது ஒரு கட்டிடத்திற்கு தூணைப்போலுள்ள இம்மூன்று தத்துவங்களின் தொழில்கள் மாறுபடுவதையே தோடங்கள் அல்லது குற்றங்கள் எனப்படும். இவையே மனித உடலுக்கு ஆதாரமாயுள்ளது, மனிதனின் சூக்கும சக்திகள் வீணாத்தண்டின் கயிற்றினுள்ளும், மூளையிலும் உள்ளன. இப்பிராண சக்தியாகிய வாதத்தோடு, பித்தம் கபம் கூடினால் முப்பிணி எனப்படும். எனவே, இம் முக்குற்ற நிலையினையே நோய் ஏற்படும்போதும்-மற்ற சமயமும் கவனிக்க வேண்டும். இவை, தனதளவினின்று கூடினும்-குறையினும் தொல்லைகள் ஏற்பட்டு, குருதியும், இதர தாதுக்களும் கேடுற்று பிணியாக மாறும். இவற்றை ரவி-மதி-நெருப்புக்குத் தொடர்புபடுத்தி, சூரிய-சந்திர-ஆதித்த மண்டலம் என அழைக்கப்படும். இவற்றின் செயல்களாக படைத்தல் (செயல்) - காத்தல் (கவரல்) - அழித்தல் (இசைவு) இவற்றைக் கூறப்படும். இவற்றின் பொருளும்-செயலும் சாதாரணமானவர்களுக்குப் புரியாது. அதற்கு, மனிதனைப் பற்றிய கல்வியும், அறிவும்-அவனது ஆன்மா, உயிர் வசீகரம், தெய்வீகம், செயல்பாட்டின் தன்மை போன்றவற்றையும் தெரிய வேண்டும்.
Tuesday, 27 March 2018
மனித உறுப்புகள்
மனித உறுப்புகள் யாவும் தமது வளர்ச்சிக்கென, தேவையானவற்றை இயற்கை மூலத்தினின்று கிரகித்துக் கொள்கிறது. பேரறிவு உடைய மனிதன்தான் இயற்கைக்கு மாறாக நடந்து, உடல் தோற்றத்தில் மாற்றமில்லாவிடினும் தனது பண்புகளைக் கெடுத்துக் கொள்கிறான். எனவே, இயற்கையில் மனிதனே பிற உயிர்களை விட எளிதில் நோய் வாய்ப்படுகின்றான். தெய்வ அருள் மனிதனின் இயல்பை மாற்றி உடலுக்கு நலமுட்டும்.
குழந்தைகள் யாவும் ஏககாலத்தில் பிறக்குமாயின். அவை ஒரே சமயம் உண்டாவதை, இரட்டைப் பிள்ளைகள் மூலம் அறியலாம். ஆயின், கருவுறுகையில் மட்டும் இவ்விதி பொருந்தாது. காரணம், கரும விதிப்படி தன் உடல் சுபாவத்தில் எது உள்ளதோ, அதையே சொந்தமாகக் கொண்டு பிறத்தலால் வேறுபாடுகள் ஏற்படும்.
மனிதனிடம் உடலின் வெளி அமைப்பு - உள் அமைப்பு என இரு கூறுபாடுகள் உண்டு. முதலாவது தூலமும் - அடுத்தது சூக்குமமும் ஆகும். எனவே, இவற்றை அறிந்து கொண்டால், மூலப் பொருள் வழியாய் நோயையும் - அதனை நீக்கும் முறையையும் எளிதில் புரிந்து கொள்ளலாம். மேலும், மனிதன் தனக்கு இயல்பிலேயே அமைந்த முழுமை சக்தியை, சரியான வழியில் காட்டத் தடுக்கும் மாயையினைக் கடந்து விட்டால், மேற்படி இயற்கை சக்தி தனது முழுமையைக் காட்டத் தொடங்குவதால், யோகிகளைப் போல் அரிய சக்திகளைப் பெறலாம்.
நோய்கள் இயற்கையில் தானே உண்டாகி-பிறகு தானே விலகும். எனவே, மருத்துவன் இவ்வியற்கையின் போக்கை அறிய வேண்டும். இதனை அறிந்தவனே மனித உடலைமப்பின் கூறுபாடுகளையும் அறிந்தவனாவான். வைத்தியத்தில் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருப்பினும், சோதிட அனுபவமில்லாவிடில் பயனில்லை. மேலும் பஞ்சபூதங்களின் பஞ்சீகரண சக்தியை அறிந்தவனால் மட்டுமே ஒரு உலோகத்தை வேறொரு உலோகமாக மாற்றவியலும். காரணம், உலகின் யாவுமே ஆதிமூலத்தினின்று தோன்றியதே தவிர - ஏகம், கூட்டு என்ற பிரிவினையே கிடையாது. யாவும் ஒன்றிலொன்றின் கலப்பேயாகும். ஆத்துமா ஒன்று மட்டுமே ஏகமாகும்.
Reference book : Siddha Maruthuva Gurugulam
வாதம் - மந்திரம்
ஒருவன் பொன் செய்யும் வித்தை எனக்கூறப்படும் வாதமுறையில் வெற்றி பெற வேண்டுமாயின், எப்படி ஒருவன் பிறவி வைத்தியனாக இருக்கின்றானோ, அதுபோல் - பிறவி வாதியாகவும் இருப்பதோடு, ஆத்தும ஞானமுடனும் திகழ வேண்டும். அவன் பூர்வகருமப்படி, பிறக்கும்போது கிரகங்கள் சரிவர அமைந்திருக்கவும் வேண்டும். உடலும் - மனமும் எவ்விதக் குற்றமுமின்றி பரிசுத்தமாயிருந்தால்தான் வாதம் சித்தியாகும் முப்பு என்பதின் ஆதிமூலப்பொருள் தான் ஆத்துமாவிள்ளது. எனவே, வாத நூல் என்பதின் ஒரு பகுதிதான் மானத இரசாயனமாகும். வாதத்தை இலாபம் கருதிச் செய்யலாகாது. இங்ஙனமே, மாயவித்தை எனப்படும் மாந்திரீகம் ஆதிசித்தர் காலம் முதல் தொன்றுதொட்டு வருவதாகும். இதனால், கண்ணுக்குப் புலப்படாத இரகசியமான சக்திகளைக் கொண்டு, வெளிப்படையாகத் தோன்றக்கூடிய செயல்களைப் புரியலாம். மனோசக்தியின் வலிமையினால் ஒருவரையும் அவரது சுற்றுப்புறத்தையும், மின் சக்தியைப் போல் கவர்ந்திழுக்கலாம். மதச்சடங்குகளின் அடிப்படையும் இதுவேறாயினும் - வேறு தந்திரச் சடங்குகளுடன் இதனை ஒப்பிடக்கூடாது. இதனால் - பிணிகளைக் களைதல், எதிர்கால நிகழ்வுகளைக் கூறுதல் முதலிய நற்செயல்களை மட்டுமின்றி - பில்லி, சூனியம், வசியம், ஈடு போன்ற தீச் செயல்களையும் செய்யலாம். சித்தர்கள் விளையாட்டாகச் செய்யும் அற்புதங்களும் மாதவித்தையாகவே கொள்ளப்படும்.
உலகின் மனிதகுலத்திற்கென ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளவை பற்றியும் - அவர்கள் எவ்வித இடையூறுமின்றி உயிர் வாழுவதற்குரிய வசதிகளைப் பற்றியும் சித்தர்கள் கொண்ட கருத்துக்களாவன.
1. உலகின் மனித குலத்தோற்றம்
குலத்தோற்றமும் - வாழ்வும் - பிணிகளும் - மருத்துவக் கொள்கையும் முக்காலத்திலும் ஒன்றேதான். காரணம், படைக்கும் காலத் தொடக்கம் முதல், தனிப்பட்ட முறையில் மானுடப் போக்கும் - ஒழுங்கும் இறைவன் வகுத்தவாறே உள்ளது - இனியும் அப்படியேதான். எவ்வித மாறுதலுமின்றியே இருக்கும். மனிதன் தோன்றியபோதே மருந்துகளும் உண்டாகிவிட்டன.
2. அண்டமே பிண்டம் - பிண்டமே அண்டம்
மனிதனே உயிரினங்களுள் மேம் பட்டவன். பிறவற்றில் காணப்படாத தேர்ந்த பேரறிவு இவனுக்கு மட்டுமேயுண்டு. இவன் தன்னுள்ளிருக்கும் அண்டத்தை ஆகாயத்தின் ஒரு பகுதியாகப் பெற்றுள்ளான். எனவே, நவக்கிரகங்களும் - பஞ்ச பூதங்களும் அதனதன் வலிமையை அவனுள் செலுத்துகையில், அதன் இயற்பிற்கேற்ற நல்ல - தீய பலன்களை அடைகின்றான். உலகைக்காக்கும் தேவதைகளின் இயல்பினால், இயற்கையில் கேடுண்டாயின் பெருவாரி முதலிய தொற்று நோய்கள் கண்டு, அதனாலான நச்சுத்தன்மை மனிதனையும் தாக்கும். ஆத்ம கோளத்தினுள் உள்ள தொற்றுக் கிருமிகளால் காரணமுண்டாகி இயல்பான சூக்குமக் காரணங்களை அனுசரிப்பின், கொள்ளை நோய்கள் ஏற்பட்டு அழிவுகள் ஏற்படும். மேலும், மனிதனின் குருதி - செவ்வாயையும், ஆத்தும நிலைகள் - சுக்கிரனையும் தழுவி நிற்கும். உயிரினத்துக்கு சுக்கிரனின் தொடர்பில்லாவிடில் இனவிருத்திக்கு எதுவான காம விச்சையே ஏற்படாது. இருபாலருக்கும் ஏற்படும் காம நட்புக்கு சுக்கிரனின் அம்சம் அவசியம் தேவை.
Reference book : Siddha Maruthuva Gurugulam
Reference book : Siddha Maruthuva Gurugulam
Monday, 26 March 2018
சுத்த சக்தி
சுவாசம் அல்லது மூச்சு என்பது உடலின் சகல இயக்கங்களுக்கும் ஆதாரமாயுள்ளது. மூச்சில்லாவிடில் உயிர் கிடையாது. மனித உடலாகிய இயந்திரம் - சிசுவாகப் பிறந்தது முதல் தொடங்கும் மூச்சு, அவன் இறக்கும் முன் இறுதியாக திணறும் மூச்சாகும் வரை ஊடாடிக் கொண்டிருக்கும். இதனையே சுத்த சக்தி எனவும் பிராணா எனவும் கூறப்படும். சாதாரணக் காற்றிலுள்ள இப்பிராண சக்தியினால்தான் சகல செயல்களையும் - சித்திகளையும் அடைய வியலும். எனவே, உடலை வளர்த்து, மூச்சுப்பயிற்சியின் மூலம் உயிரை வளர்த்தனர். மேலும் - பிரகிருதி சுபாவத்தில், இறப்பு என்பது மனித வாழ்வின் ஒரு முக்கியப் பகுதியாகக் கொள்வதில்லை. மனிதன் - காலங் காலமாகப் பழகி வரும் அறியாமையாலும், அச்சத்தாலும், தன்னைத்தானே தவறாகக் கருதுவதாலும் தான் மரணமடைகின்றான். ஆனால், சித்தர்களோ - உடலின் அணுத்திரள் சக்திகளை, தனது ஆன்ம சக்தியால் தகுந்தபடி மீண்டும் ஒழுங்கு படுத்துவதன் மூலம் நோயையும் - மரணத்தையும் வெற்றி கொண்டு, என்றும் நிலைத்திருப்பர்.
Reference book : Siddha Maruthuva Gurugulam
அண்டமும்-பிண்டமும்
சித்தர்களின் கருத்துக்கள்
சித்தர்களது கருத்துக்கள் பலவாகும்.
அவை அண்டமும்-பிண்டமும்
வெளியுள்ள அண்டமாகிய இவ்வுலகத்திற்கும்-பிண்டமாகிய மனிதனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உண்மையில் மனிதன் அண்டத்தின் ஓர் சிற்றுருவமே தவிர வேறில்லை. எனவே, பிரகிருதியின் மூலப்பொருட்களினால், உடல் ஒரு பாகமாக ஏற்பட்டுள்ளது போல், அவனது ஆன்மாவும்-மனதும் உள்ளபடியே உடலில் ஒரு பகுதியாக உள்ளது அவன் தாதுக்கள்-த்துவங்களோடு அண்டத்தின் சிறு பாகத்தையும் கொண்டவனாகும். பஞ்ச பூதங்களே வெளி உலகிற்கும்-மனிதனுள்ளும் மூலக்காரணமாக உள்ளது. இவையே உலகத் தோற்றம், திதி, சங்காரம் இவற்றுக்கு ஏதுவாயுள்ளது. ஒவ்வொரு பூதமும், மற்ற பூதங்களுடன் கலந்துள்ளது. இவற்றின் இரகசியங்களையும், கோட்பாடுகளையும் அறிந்தவனால் ஒரு உலோகத்தை வேறொரு உலோகமாக மாற்றக்கூடும். ஏனெனில் சகலபொருளும் ஒரே ஆதி மூலப் பொருளினின்றே தோன்றியதாகும். எனவே ஏகபூதம்-கலப்பு பூதம் என்ற வேற்றுமையே கிடையாது. மேலும்-முக்குற்றங்களே உடலைமப்பிற்கும், பிணிகள் பற்றுவதற்கும் அடிப்படையாகும். வெளியுலகில் ஏதேனும் விகல்பம் தோன்றினால், மனிதனினுற்ற முக்குற்றத்திலும் இதே போன்ற விகல்பம் ஏற்படும். இந்த அண்டபிண்டக் கலப்புத் தொடர்புதான் முப்பிணிக் கொள்கைக்கும்-உடற் தத்துவ நூலுக்கும் மூலகாரணமாயுள்ளது. உண்மையில், உலகின் சகல பொருளிலும் முப்பிணியின் கலப்பு அதனதன் அளவிற்கேற்ப இருக்கவே செய்யும். மனிதனின் குணாதிசயங்களையும் இதன் செயலினின்று பிரிக்க முடியாது. (பஞ்சபூதங்களுள் முப்பிணி என்பது=காற்று-நெருப்பு-நீர் ஆகும். இதுவே, உடலின் வாத-பித்த-கபம் ஆகும்)
Reference book : Siddha Maruthuva Gurugulam
Reference book : Siddha Maruthuva Gurugulam
பஞ்ச பூதங்கள் இந்த உடலை ஆளும் காலங்கள்
மண்ணின்கூ றிருபதாண்டு வளரப்புத் தேயு வாய்
விண்ணின்கூ றுடனே நூறு வயதென விளம்புமப்பால் எண்ணில்மூ வேழுகோடி ரோகமு மிதமதாகப்
பெண்ணின் மிக் காயமானே பிரிந்துநான் மொழிகின்றேனே. (23)
விளக்கம்
விண்ணின்கூ றுடனே நூறு வயதென விளம்புமப்பால் எண்ணில்மூ வேழுகோடி ரோகமு மிதமதாகப்
பெண்ணின் மிக் காயமானே பிரிந்துநான் மொழிகின்றேனே. (23)
விளக்கம்
1 முதல் 20 வயது வரை பிருதிவியும், 21 முதல் 40 வயது வரை அப்பும், 41 முதல் 80 வயது வரை வாயுவும், 81 முதல் 100 வயது ஆகாசமும் இந்த உடலை ஆளுகின்றன.
மனிதனுடைய ஆயுட்கால வாதம், பித்தம், கபம் தோஷங்களின் காலநிலைமை
அய்யுமுப் பத்துமூன்று வருஷமொன் றதிகநாலு
செய்யதிங் களுமாய்ப் பித்தஞ் செய்தியப் படியே சீராய்
உய்யவே வாதம் வந்த படியுறு வயது நூறாய்
தையலே வாகடத்தின் சாத்திரப் படிகள் தானே. (22)
விளக்கம்
மனிதனின் ஆயுள் காலம் சராசரி 100 என்று வைத்துக்கொண்டால், 1 முதல் 33 வயது வரை கபம் காலமாகும். 34 முதல் 66 வயது வரை பித்தம் கலமாகும். 67 முதல் 100 வயது வரை வாதம் அதிகரித்திருக்கும் காலமாகும்.
Reference book : Agathiyar 2000 Part-I
Reference book : Agathiyar 2000 Part-I
Friday, 23 March 2018
அகத்தியர் கூறும் கற்பம் உற்பத்தியாகும் ரகசியம்
ஆகனாள் விந்துவுண்டா யஞ்சானாள் கருப்போலாகிப்
போகமூ வஞ்சுநாழி(ளி)ல் பொருந்திய முட்டைபோல
மேகமாய்த் தீர்க்கமாகி யிரண்டினில் மார்மட்டாகிப்
பாகமா மூன்றாந் திங்கள் பகருந்தி மட்டுமாமே. (19)
மட்டுட னாலாந்திங்கள் வளர்ந்திட்டுப் பாதமெங்குங்
கட்டுட னஞ்சாமாதங் கருதுபூ ரணமா மாறில்
தட்டுட னெலும்புசீவன் தலையிர் நரம்புமேழில்
எட்டுட னறிவாமொன்ப தியல்தச பிறவியாமே. (20)
விளக்கம் :
கணவன்-மனைவி சேர்க்கைக்குப் பின்னர் 5-வது நாள் கருவானது நகரும்தன்மையை வந்தடையும். 15-வது நாள் முட்டைபோல் உருவாகும். நாட்கள் செல்லச் செல்ல இது நீண்ட வடிவத்தையடைந்து குழந்தைக்கு மார்பு உண்டாகிறது. 3-வது மாதம் வயிறு ஏற்படும். 4-வது மாதம் குழந்தைக்குக் கை, கால் உண்டாகும். 5-வது மாதத்திலும் மேல்கூறிய உறுப்புகள் நன்றாக வளருகின்றன. 6-வது மாதத்தில் எலும்பு, தலை, மயிர், நரம்பு முதலியவைகளுடன் 7-ஆம் மாதம் குழந்தைக்கு சீவனாகிய உயிர் உண்டாகும். 8-வது மாதம் குழந்தைக்கு அறிவு மற்றும் உணர்ச்சிகள் ஏற்படுகிறது. 9-வது மாதம் முதல் பிரஸவ காலமாகும். இந்த காலத்தில் அல்ட்ரா சவுண்ட் மற்றும் யு.எஸ்.ஜி. அலோகா மெஷின் கண்டுபிடிக்கும் கருவளர்ச்சியை, நம் முன்னோர் வாழ்ந்த காலத்தில் எந்த இயந்திரமும் இல்லாமலேயே கண்டுபிடித்தார்கள் என்பதை நினைக்கும்போது எவ்வளவு பெருமைக்குறியது.
Reference book : Agathiyar 2000 Part-I
Reference book : Agathiyar 2000 Part-I
Thursday, 22 March 2018
சித்தர்கள் பற்றிய விபரம்
சிவனே சித்தன் என்றும் அவர் தம்வழி மரபினரே தமிழ் மக்கள் எனவும் கூறுவது உண்டு. சித்தர்கள், பொய்ப்பொருளுக்கு மெய்பொருள் கண்டுணர்ந்தோராவர் - வாயு - மனோவேகத்தில் திசைகளும் திகந்தங்களும் சுற்றி வருவோர் - மேருமுதல் துருவம் முடிய சுற்றும் பரிதியென விளங்குவோர் - எழுகடலையும் தம் அங்கையில் ஏந்திப் பருக வல்லோர் - பரிதி, மதி, வையம் இவற்றை குடுகுக்குள் காட்ட வலியோர் - பாரினில் கற்பக மரத்தையும் உற்பவிப்போர் - கலையையும், செல்வத்தையும் இரு பணியாளராக்குவோர் - கேட்டது கொடுத்துவர நிற்க வைப்போர் - பரந்த நீர்ப்பகுதியையும் ஒரு கேணியில் குறுக்குவோர் - உற்பத்தியாளனையும் உலகையும் போகனு பவத்தில் உறங்குவிப்போர் - பஞ்சப் பொருட்களும் ஒன்றிலொன்று ஒடுங்குகையில் பரவெளியில் வெளியாகுவோர் - பிரளயத்தில் நீரில் வாழும் வண்டெனத்துவண்டு சிவயோக நிலை நிற்போர். நெடிய முகிலேழும் பரந்து பெய்கின்ற காலை நிலவின் நடுவில் ஊரென விளங்குவோர். பெரும் புயலில் மேருவென அசையாதிருப்போர் - இரவு பகலற்ற இடத்திலிருப்போர் - சாகா நிலைதனில் சாகாதிருப்போர் - புசிப்பிற் கலைந்திடார் - ஓட்டினையெடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளிவிடும் பொன்னாக்குவோர். இத்தகு சிறப்புமிக்க சித்தர்களால் வாதம், வைத்தியம், யோகம், மந்திரம், கணிதம், வின்வெளி ஆய்வு உட்படக் கூறாத பொருள் ஒன்றில்லை. மேலும் சித்தர்கள் என்பவர்கள் சித்தத்தில் சிந்தித்தப்படியே உடலும், உண்பனவும் பெற்று அனுபவிக்கின்றவர்களாகும். இவர்கள் சிவநெறியைப் பூண்டு ஒழுகிய சித்தசமயத்தைச் சார்ந்த தமிழ்மக்களாகும். சிவநெறியிலுள்ள கிரியைகளையும், விதிகளையும் விலக்கிவிட்டு ஆத்மஞானம் ஒன்றையே கடைப்பிடித்தவர்கள். காரணகாரியங்களால் உடலைச் சோதித்து, எவ்வவற்றால் உடல் வளர்ந்து - அழிகின்றது என்பதை கடும் முயற்சியால் கண்டறிந்து, பொய் என்று சோல்லும் உடலை மெய் என்றாக்கி, அட்டமா சித்திகளையும் அடைந்தவர்கள். தமது உடலை தக்கபடி பலப்படுத்திக் கொண்டால் பிறப்பிறப்பினின்று நீங்கி விடலாம் என உணர்ந்து, பல்லாண்டு வாழும் நித்திய வாழ்வைப் பெற்ற மகான்கள் கல்பமுறையிலும், யோக சாதனையிலும் அபாரசக்தி பெற்றும் - அழியும் உடலைக்கொண்டே, ஞான சக்தியால் மோட்ச சாதனை வழியைத் தேடுபவர்கள். உலோகங்களாலும், மந்திர சக்தியாலும் சுகனக்குளிகை கொண்டு பற்பல அண்டங்களையும் சுற்றி, ஆங்காங்குள்ள அதிசயங்களைக் கண்டு மகிழ்ந்தவர்கள். தங்களது மாமிச உடலை இலிங்கவடிவாக மாற்ற வல்லவர்கள். மனோசக்தியால் மருந்து கொள்ளாமலேயே உடலின் அணுவாதி தத்துவங்களை பிணியும், மரணமும் நீக்கவல்லவர்கள் - மனோசங்கற்பத்தினாலான மனோசக்தியை, நினைத்தபடி நாடி வழியாக செலுத்தாமலே, மின் சக்தியைப் போல் திக்கெங்கும் நடப்பவற்றை அமர்ந்துள்ள நிலையிலேயே அறிந்து கொள்ளவும், எங்கேனுமுள்ள எவருடனும் பேசும் திறனும் படைத்தவர்கள்.
வடமொழியில் புகழப் பெற்றுள்ள - வாதவித்தையில் மட்டும் ஈடுபட்ட சில இரசாயன சாஸ்திரிகள், ஆத்ம ஞான சித்தி பெற்ற சித்தர்களுக்கு இணையாக மாட்டார்கள். ஆயின் வாதமுறையிலும் சிறுது ஞானம் அடையலாம் என்பதும் சித்தர்களின் கருத்தாகும். எனினும், சித்தர்கள் வாத - வைத்திய - யோக - ஞான - வழிகளில் சித்தியடைந்தும், உடல் அழியுமுன்னரே முக்தியடைய ஏதுவான சித்திகைளப் பெறுதல் அவசியமென்றும், உடல் அழிந்தால் பிறகு முக்தியடைய பல பிறவிகளை அடைய வேண்டுமென ஊகித்தறிந்தும் யோகவழியைக் கடைப்பிடித்தவர்களாகும். அதற்கு காயகல்பமும், அட்டசித்தியும் அவசியமெனக் கண்டறிந்தவர்கள். வாத - வைத்தியத்தில் ஈடுபட்டும், யோக - ஞான வழியில் கண்ட தங்களது அனுபவத்தையும், ரகசியங்களையும், அற்புதங்களையும் தங்கள் நூற்களின் மூலம் உலகிற்கு தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளனர். இன்றைய தமிழ் மருத்துவத்திற்கே காரண கர்த்தாவாகிய யாவரும் பயன் படுமாறு தூய தமிழில் செய்யுள் வடிவில் பாடிவைத்த மகான்களாகும். இவர்களது எண்ணிக்கை 7-8 லட்சம் எனப்பலவாறாகக் கூறப்படும். சித்திர்களின் வழி காட்டலினால் தான் இவ்வுலகமே இயங்கிவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
Reference book : Siddha Maruthuva Gurugulam
சித்தர்களது காலம் ஆதியாகும்
முதல் நிலம் தில்லை ஆகும். இங்ஙனமே, மண்-தஞ்சை (பிரகதீசன்) நீர் -திருவாணைக் காவல் (சம்புகேசன்), நெருப்பு - திருவண்ணாமலை (சோதீசன்), காற்று - திருக்குற்றாலம் (குற்றாலவாயன்), வெளி - தில்லை (சித்சபேசன்) ஆகியன ஐம்பெரும் இடங்களாகும்.
சமயம்
கடவுள், உயிர், உலகம், யாக்கை பிறவி, முக்தி, இன்பம் மற்றும் இதன் வகை தொகை வழியாகும். வழி - மூலத்தோர், நாதத்தோர், பெளத்தரும், சமனரும் ஆவர்.
வழிபாடு
சக்தி வழிபாடு, பூரணவழிபாடு, மோனவழிபாடு, சோதிவழிபாடு, மெய்வழிபாடு ஆகியனவாகும். (ஊமை, குருடன், செவிடன், முடவன், நொண்டி இவர்கள் வணங்கும் ஒரே வழிபாடு), தொகை - நவகோடியாகும் (சிறப்புடையோர் பதினெண்மராவர்)
பஞ்சவதிக்கு அருகில் இராமர் சந்தித்ததாகக் கூறப்படும் அகஸ்தியர் முதலாவது அகஸ்தியரல்ல. எனவே அவர் சித்தர் கல்வியைச் சார்ந்தவர் என்பது கட்டுக் கதையாகும். மேலும் அவர் வடபுலத்தைச் சார்ந்த பெரிய இருடி என்பதே ஐயத்திற்குரியதாகும். ஆகவே, வெவ்வேறு காலத்திலும் - இடத்திலும், அகஸ்தியர் என்ற பெயரில் பலர் இருந்துள்ளது புரியும் - புராணங்களில் வரும் அகஸ்தியர்கள் அனைவரும் ஒருவரே எனவும் - அவர்தான் மருத்துவம், மந்திரம், வேதை உட்பட பலவற்றையும் இயற்றினார் எனவும் கூறுவது முற்றிலும் தவறாகும். எனவே ஆதி அகத்தியரின் அல்லது மற்ற சித்தர்களின் மூல நூற்களின்று - அவர்களது வழி முறையினரால் பதியப்பெற்று, யாவும் அகத்தியர் பெயரிலேயே வெளியானவை என்பதே உண்மை. இதை முற்றிலும் கண்டறிவது என்பது சிரமமேயாகும். ஆயினும், உண்மையான, முதன்முதலான தமிழ் அகத்தியரும் - பிற்கால ஆரிய அகஸ்தியர்களும் முற்றிலும் வெவ்வேறாகும் என்பதை என்றும் மறக்கலாகாது.
Reference book : Siddha Maruthuva Gurugulam
Reference book : Siddha Maruthuva Gurugulam
சித்தர்களின் காலம்
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் என பொதுவாகக் கூறுவார்கள். அவர்கள் அனேக காலத்திற்கு முன்பு இருந்தே வந்துள்ளதால் இதுதான் அவர்கள் வாழ்ந்த காலம் என்று கூற முடியவில்லை. நவதாதச் சித்தர்கள் தொன்று தொட்டு இருந்துள்ளதாகவும்-இவர்களுக்குப் பின் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே பதினெண் சித்தர்கள் தோன்றினர் எனவும் அறிகின்றோம். அயோத்தி மன்னர் இராமபிரான் வனவாசத்தின்போது, தண்டகாரணியத்தில் சித்தர்களிடமிருந்து பெளதிக-வாத முறைகளைக் கற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், வான்மீகர் மூலமாக புற்றான் சோற்றின் மகிமையை அறிந்து, கடலை வற்றச் செய்து இலங்கைக்குச் சென்றதாக யாகோபு கூறுவார். மேலும், துங்கபத்திரா நதிக்கு வடபுறம், விந்திய மலையைச் சார்ந்த காடுகளில் அகஸ்தியர் வசித்து வந்த பின்னரே-சுமார் கி.மு.750-ல் ஆரியர் தென்னக எல்லையினுள் நுழையத் தொடங்கினர் எனவும்-அவர்கள் அகஸ்தியர் தலைமையின் கீழ்தான் தமிழகத்தை அடைந்ததாகவும் கருதப்படுகிறது. தன்வந்திரியின் மாணவரெனக் கூறப்படும் இந்த அகஸ்தியர் 18-24-48 சீடர்களுடன் ஆசிரமம் அமைத்து கல்வி புகட்டியதோடு, ஆயுள் வேதத்தையும் இங்கு நுழைத்தார் எனவும் கருதப்படும். இதன் மூலம், ஆரிய மார்க்கங்களை இங்கு புகட்டியதால் தான் - சித்தர்களது அரிய பெரிய செயல்களும், சித்தர்மார்க்கமும் கொள்கைகளும் சீரழிந்து வேரற்றப்போனது.
சகல கலைகளிலும்-ஆய்வுகளிலும்-மருத்துவத்திலும் மிகவும் அறிவுப் பூர்வமான சித்தர்களது காலம்-பொற்காலமாகும். அப்போது, புதிய சிந்தனைகள். தோன்றிச் செழித்தோங்கின. ஆயுள்வேதம் நுழைந்தபின் நிலையான கருத்துக்கள் மாறி புதியனவற்றில் மோகம் பிறந்தது. எனினும், பழைய முறைகளும் தொடர்ந்தன. 17-ஆம் நூற்றாண்டின், சர் தாமஸ் புரோனி என்பவர் சித்த மருத்துவ நுணுக்கங்களை ஒளிவீசும் வின்மீண்களெனக் கூறுவார். சித்தர்களது முக்குற்றக் கொள்கையும் மூளையிலுள்ள (பினியல்) சுரப்பியில் ஆன்மா தங்கியுள்ளதாகக் கூறுவதும் இன்றும் நிலைத்துள்ளது. ஒரு அறிஞரின் முடிவின்படி சித்த மருத்துவமுறை, கி.மு. 10000-4440 ஆண்டுகளிலேயே இருந்துள்ளதாகக் கூறுவர்.
Reference book : Siddha Maruthuva Gurugulam
Reference book : Siddha Maruthuva Gurugulam
Wednesday, 21 March 2018
சித்த மருத்துவம் நவீன ஆய்வு
நவீன ஆய்வாளர்கள், சித்த மருத்துவம் முதற் சங்க காலமாகிய 10000-ம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதெனவும்-மற்றும் சிலர் வடக்கிலிருந்த ஆரியர் தென்னகத்தில் குடியேறுதற்கு முன்பே, அதாவது 27000 ஆண்டுகட்கு முன்னரே நாடெங்கும் பரவியிருந்தது எனவும் கூறுகின்றனர். மேலும், ஆயுள் வேதத்தின் அடிப்படை நூற்களான அஷ்டாங்க ஹிருதயம்-கி.பி. 900, சாரங்கதர சம்ஹிதை - கி.பி.1300, பரப்ப பிரகாசம் - கி.பி. 1600, கிரேக்க வைத்தியம் - கி.பி. 900, அலோபதி வைத்தியம்-கி.பி.1757, உரோமர் வைத்தியம் - கி.பி. 300, யூனானி வைத்தியம் - கி.பி. 600, ஆகிய காலங்களில் தோன்றியதாகக் கூறுவர். மேலும் தமிழ் மருத்துவத்தின் கோட்பாடுகளை மற்றவர் நன்கு புரிந்து கொள்ளாத நிலையிலும் கூட கிரேக்க, உரோம, அரேபியராலும் ஏன், கி.பி. 1800 முடிய ஐரோப்பிய வைத்தியர்களாலும் மேற்கோளாக எடுத்துக் கூறப்பட்டுள்ளதையும், நமது மருத்துவ முறைகளும், பொருட்பண்பு விரிவுரைகளும், அறுவைச் சிகிச்சை முறைகளும், கிரேக்க, உரோம, அராபிய, ஹீப்ரு, சீன, பாரசீக, தீபத்திய நாடுகளின் வைத்திய சாத்திரங்களிலும், நவீன ஐரோப்பிய முறைகளிலும் கூட இணைக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.
இந்தியாவில் கிட்டும் பலவகை மருந்துப் பொருட்களும் மற்ற நாட்டு மருத்துவ சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளதையும் அறியவும். இவையன்றி 2000-ஆண்டுகட்கு முன் வாழ்ந்த தெய்வப் புலவர் திருவள்ளுவர் தமது குறளில் மருத்துவத்துக்கு தனியாக ஒரு அதிகாரம் வகுத்துள்ளதையும், சித்த மருத்துவத்தின் தத்துவங்களின் வாதம் (வளி), பித்தம், கபத்தைக் குறிப்பிடுமளவில் மிகினும் குறையினும் நோய் செய்யு நூலோர் வளி (வாயு) முதலாவெண்ணிய மூன்று என்ற குறட்பாவை இயற்றியதினின்றும் அந்நாளிலேயே சித்த மருத்துவம் சிறப்புற்றிருந்ததை அறியலாம். எனவே, எங்ஙனம் நோக்கினும் தேவர்கட்கு ஒப்பாகக் கூறவல்ல-மற்ற முறைகளிலெல்லாம் கையாளாத பல சிறப்பு முறைகளைக் கொண்ட சித்த மருத்துவமே உலகில் தொன்மையானதும், மேன்மையானதும் என்று உணர்ந்து கொள்ளலாம்.
Reference book : Siddha Maruthuva Gurugulam
சித்த மருத்துவத்தின் தொன்மை
மனிதனுக்கு ஏற்படும் கேடுகளை நீக்கி, நலமுண்டாக்கி ஆயுளை நீடிக்கச் செய்வதற்கென தென்மொழியாகிய தேன் தமிழில் சிவபெருமான் உமையவளுக்கும்-அவள் நந்திப் பெருமானுக்கும்-அவர் தன்வந்திரிக்கும்-அவர் அச்சுவனித் தேவர்களுக்கும்-அவர்கள் விரிந்த அலைகளையுடைய கடலையுண்ட அகத்தியப் பெருமானுக்கும்-அவர் புலத்தியர்க்கும்-அவர் தருமசெளமியருக்கும்-அவர் தேரருக்கும்-அவர் தம் வழிவந்த ஏனையர்க்கும் இயம்பியதாகக் கூறப்படுகிறது. (இதுவன்றி வேறு சில பரம்பரைகளையும் கூறியுள்ளனர்). மேலும் மருத்துவ நூற்களை எழுதிய பெரியார்கள் தங்கள் வழிபடு கடவுளை வணங்கி மருத்துவப் பரம்பரையைக் கூறுகின்றனர். அதாவது அவர்கள் மருத்துவ நூற்களை எவ்வாறு அடைந்தனர் என்பதை சுருக்கமாக இயம்பியுள்ளனர். வடமொழி (சமசுகிருதம்) நூற்களை எழுதியவர்கள் வாக்படர், அச்சுவினித் தேவர் ஆகிய இருடிகளிடம் இருந்து தன்வந்திரி பகவான் மூலம் ஆயுர்வேதம் வந்தது எனவும், தென்மொழி (தமிழ்) நூற்களை எழுதியவர்கள், அவை பரமசிவனிடமிருந்து, நந்தி வழியாகவும், அவரிடமிருந்து அகத்தியர்-புலத்தியர் முதலிய சித்தர்கள் வழியாகவும் சித்த மருத்துவம் கிடைத்தது எனவும் கூறியுள்ளனர்.
அன்பர்களே, இயற்கை-செயற்கை ஒழுக்க வழிகளில் பயின்ற இக்காலத்தவராகிய நமக்கு இது ஒரு புதுமையாகவே தோன்றும், ஏனெனில், உருவமாகவும், உருவமின்றியும் எங்கும் நிறைந்தவராயிருக்கும் கடவுளிடத்திலிருந்தும், தேவர்களிடத்திலிருந்தும் அக்காலத்தில் இம்மருத்துவ நூல்கள் தோன்றின என்றும், இக்காலத்துப் பெரும்பாலும் சிதலுக்கு இரையாகிய அம்மருத்துவ நூற்களையெல்லாம் மீண்டும் அப்பெரியார்கள் ஏன் நமக்கு அளிக்கலாகாது? என்றும், மேற்கூறிய கடவுளிடத்திலிருந்து எங்ஙனம் இந்த வைத்திய நூற்கள் உண்டாகக்கூடும்? என்றும், இவை நவீன ஆய்விற்கொப்ப உள்ளனவா? என்றும், இவை நவீன ஆய்விற்கொப்ப உள்ளனவா? என்றும் கேட்க வழி ஏற்படுதலின், இவையெல்லாம் புராணக்கதை என்றே எண்ணுவதற்கு ஏதுவாகின்றன. ஆயினும் மருத்துவத்தில் மிக்க தேற்சி பெற்று, நன்முறையில் ஒழுகி, மேன்மையுடன் புகழ்பெற்று வாழ்ந்த பெரியோர்களைக் கடவுளைப் போன்றே போற்றி வாழ்தல் தமிழ் மக்களின் இயல்பாதலை நாம் இன்றும் கண்கூடாகக் காண்கிறோம். ஆகவே அக்காலத்தில் மிக்க கீர்த்தியுடன் வாழ்ந்த மருத்துவப் பெரியோர்களைக் கடவுள் என்றே மதித்துக் கூறியதாக கொள்வோம். (மருத்துவ நூற்களை மட்டுமின்றி, ஏனைய தமிழ் நூற்களும் தேவர்களிடமிருந்தும், கடவுளிடமிருந்தும் நமக்குக் கிடைக்கப் பெற்றனவாகும் என்று கூறப்படுவதையும் நாம் அறிவோம்.) மற்றும், மூலிகை வகை முதலியன சித்தர்களிடம் தத்தமக்கு உரிய பண்பு-குணநலன்கள்-வீரியம் முதலியன பற்றி தாமே எடுத்து கூறிப்பயனுறச் செய்ததாகவும், பறவை இனம், மிருகங்கள், முதலிய தத்தமக்கு நோயுற்றபோது அவற்றினின்றும் விடுபட உட்கொண்ட மூலிகை முதலியவற்றைக் கண்டறிந்து மாந்தன் மருந்துகளைக் கண்டறிந்தான் என்றும் கூறுவதுமுண்டு-நமது சித்தர்களின் பண்டைய முறையிலுள்ளவற்றையே, புதிய பெயரில் இன்றைய நவீன ஆய்வாளர்கள் கூறுகின்றனரேயன்றி, புதியதாக எதையும் கூறிவிடவில்லை.
Reference book : Siddha Maruthuva Gurugulam
தமிழகமும்-தமிழ் மருத்துவமும்
உலகம் உண்டானபொழுது முதன் முதலில் தோன்றிய நிலப்பரப்பு தமிழகமும் அதனுடன் இணைந்திருந்து மறைந்த நிலப்பகுதிகளுமேயாகும் என்பதையும், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்க்குடியினரின் மொழியும்-கலைகளும்-மருத்துவமும்-பண்பாடும் (தோன்றி மறைந்துவரும் பல்பொருள் பெயருள்ள நாடுகளைப் போலன்றி) பல்லாயிரம் ஆண்டுகட்குப்பின் தோன்றிய உலகின் மற்ற எல்லா நாட்டினர்க்கும் அன்றும்-இன்றும்-என்றும் வழிகாட்டியாகத் திகழ்ந்துவரும் மேன்மை மிக்கவை என்பதையும் உலகப் பேராய்வாளர்களும், அறிஞர்களும் ஒப்புக்கொண்ட, மறுக்க இயலாத உண்மையாகும் என்று அறிவீர்கள். உலக வாழ் மக்களின் நல்வாழ்விற்குரிய சகலவிதமான வற்றாத வளங்களையும் வாரிக் குவித்துள்ள இயற்கையன்னை, தான் கொண்டு, விதிமுறைகைள மீறி நடக்கும் மனிதனுக்கு ஏற்ற தண்டனையளித்து, அவன் தமது குற்றமுணர்ந்து, வருந்தித் திருந்துவதற்கென அவன் உடன் பிறப்புத் தண்டனையாக பலவகையான பிணிகளையும் ஏற்படுத்தி உள்ளதை அறிவோம்.
அங்ஙனம் மனிதனுக்கு தீவினைக்கேற்ப ஏற்படும் நோய்கைளத் தீர்ப்பதற்கென அவன் வாழும் நாட்டிலும், காட்டிலும் எண்ணற்ற மூலிகைகளையும்-தாதுப்பொருட்களையும்-உயிரினங்களையும் தோற்று வித்த இயற்கையன்னை, அவற்றினைக் கையாண்டு பிணி நீக்கிப் பெருவாழ்வு பெறும் வழிமுறைகளையும் வகுத்துள்ளதையே மருத்துவம் என்று கூறுகின்றோம். இங்கு மருந்து என்ற சொல் வலித்தல் விகாரம் பெற்று மருத்து எனவாகி, அதனைக் கொண்டு புரியும் செயலையுணர்த்த மருத்துவம் என அமைந்தது. இதனை, வைத்தியம்-சிகிச்சை-பரிகாரம்-மாற்று மருந்து-நீக்குகை-அகற்றல் என்ற வேறு சொற்களாலும் அழைப்பர். மருத்துவம் என்ற சொல் நோயை மறுத்தல் என்பதிலிருந்து பிறந்ததாகவும் கூறுவதுண்டு. மருத்துவ முறைகளில் இன்று சித்த மருத்துவத்தோடு ஆயுள்வேதம், யூனானி, உரோமர் வைத்தியம், கிரேக்கர் வைத்தியம், அலோபதி, ஓமியோபதி, பயோகெமிஸ்ட்ரி, குரோமோபதி, நேட்சுரோபதி, ஹைடிரோபதி, அக்குப்பஞ்சர், ஆல்டர்நேட்டிவ், மெஸ்மரிச முறை என்ற பல்வேறு வகையான வைத்திய முறைகளும் நிலவிவந்ததாலும், இவை அனைத்திலும் முதலில் தோன்றியதும், எக்காலத்திற்கும் ஏற்றவண்ணம் வாழ்க்கை முறையை ஒட்டியதும், தத்துவார்த்த விஞ்ஞானப்பூர்வமானதும், என்றென்றும் அழியாததுமாகிய தமிழ் மருத்துவமே மிக்க மேன்மையுடையது என்பதில் அறிவுடையோர்க்கு ஐயமிராது.
Reference book : Siddha Maruthuva Gurugulam
Reference book : Siddha Maruthuva Gurugulam
Tuesday, 20 March 2018
4. ஞானம் (தத்துவம்-விவேகம்
உலகத் தோற்றங்களில், மனிதனுக்கு மட்டுமே சகல வித சக்திகளும் உடலினுள் மறைந்துள்ளது. இதனால் மனிதனை இறைவனின் ஆற்றலுக்கு இணையாகவே கூறலாம். ஆயின் இவனோ இச்சக்திகளை சிறிதும் உணராமலும், அவற்றை தன் வயமாக்கிக் கொள்ள முயலாமலும், வழியறியாமலும் பெருங்குற்றம் புரிந்த வனாகின்றனான்.
நமது உடலில் உயிர் நிலைத்திருக்கக் காரணமாகவுள்ள ஆத்மாவுக்கு இவ்விஷயத்தில் - பஞ்சபூதம், ஆறாதாரம், முக்குணம், மூன்றுநாடி, தசவாயு-உள்ளிட்ட 96-தத்துவங்களும் ஆதரவாகவே உள்ளன. ஆயின், மனிதனுக்கு இயற்கையாயுள்ள பூர்ணசக்தி, மாயையினால் மறைக்கப்பட்டு, சரியான பாதையில் செல்லவிடாமல் தடுக்கும். அப்படித் தடுக்காதபடி செய்துவிட்டால், இயற்கை சக்தியானது தனது முழு வலிமையையும் காட்டும். இதனைக் கண்டறிந்து வெல்வதே ஞானமாகும். (அடியிலிருந்து உச்சகட்டம் வரை விளக்கப் பட்டுள்ளதும், நமக்கே உரியதுமான 96-தத்துவங்களை சித்தாந்திகளும், வேதாந்திகளும் ஒப்புக் கொண்டாலும், வேதாந்திகள் இதில் 36-ஐ மட்டும் ஏற்றுக் கொண்டுள்ள நிலை மாறி, மென்மேலும் ஆய்தறிதலின் மூலம் முழுமையாக ஏற்க முன்வரக் கூடும்.)
Reference book : Siddha Maruthuva Gurugulam
Reference book : Siddha Maruthuva Gurugulam
3. யோகம் (தியானம்-ஒடுக்கம்)
மாந்தருக்கு இயற்கையிலே உள்ள காந்தசக்தியினால்-பிராணாயாமத்தினால் விளைந்த வலிமையினால் இவ்வுலகையே தன் வயமாக்கி, தன் ஆளுகைக் குட்படுத்தவியலும் யோகப்பயிற்சி மட்டுமே பிறப்பிறப்பை வெகு விரைவிலும், சுருக்கமாகவும் முடித்துக் கொள்ள குறுக்கு வழியாகும். இதனை, ஒரு குரு இருந்து தொட்டுக்காட்டாவிடில் உடல் நலம் கெடும். இதில், தூய மனமே ஒரு கருவாக தன்னுள் நின்று வழி காட்டும். அதாவது, இறை வணக்கம் மேலோங்க தன்னைத்தானறியும் அறிவு விளக்கமும் மிகுதியாகி, அப்படி உயர்நிலை பெற்ற மனமே குருவாக நிற்கும். குண்டலினிக்குள் வலிவும், நரம்பு சக்தியும் தக்கபடி இல்லாவிடில் உடலில் குருதி ஓட்டமிராது, இருதயம் துடிக்காது, நுரையீரல் இயங்காது, இதர உறுப்புகளும் தமது செயலைப் புரியாது.
ஒரு யோகியால் பஞ்சபூதங்களை அடக்கி, இயற்கை பேதங்களை மாற்றவியலும், தோற்றங்களுள் எவ்வித வடிவும் பெறலாம். தனது உடலையே போக்கவும், மீண்டும் ஆக்கவும் செய்யலாம். பரகாயப் பிரவேசமாகிய, பிறர் உடலினுள் புகுந்து விடலாம். பிணத்தில் கூடப்புகுந்து, அவ்வுடலோடு எழுந்து நடமாடலாம். புதிதாகவே மனிதரையும், மனதையும், செயல்களையும் உண்டுபண்ணலாம்.
Reference book : Siddha Maruthuva Gurugulam
Reference book : Siddha Maruthuva Gurugulam
2. வைத்தியம் (மருத்துவம்-சிகிச்சை)
சித்தர்கள் கூற்றுப்படி, மனிதனுக்கு ஏற்படும் பிணகளும், இதர துன்பங்களும்-கிரகக் கோளாறுகளும், பூர்வ கருமானுசாரங்களும், துர்தேவதைகள் போன்றவற்றால்தான் ஏற்படுகிறது. எனவே ஒரு நோயாளிக்கு சிகிச்சை செய்யுமுன் அவனது சாதகப்படி கிரகநிலையறிந்து, தீயவிளைவுகளைத் தடுக்கவுள்ள பல நூதனமான விதிகளையும், மாந்திரீக மனோவசியக் கிரியைகளையும், அனுஷ்டானங்களையும் அறிந்து செயல்பட வேண்டும்.
மேலும், நோய்கள் இயற்கையில் தானாகவே வந்து, தானாகவே நீங்குவதால்-மருத்துவர்கள், மனிதனுக்கு இயல்பாய் ஏற்படும் குற்றங்கள் எப்படி வந்தது என அறிதல் வேண்டும் மற்றும், இயற்கை நியதிகளை நன்கு புரியாமலும், அதற்குறிய உண்மை அறிவைச் செலுத்தாமலும் சிகிச்சை செய்வது-தனது கொள்கை, கருத்து, மனப்போக்கு இவற்றை கொண்டதாக இருக்குமேதவிர, உண்மையில் பிணிகளை நீக்குவதாக அமையாது. எனவே, மனிதன் தனது சுய சக்தியினால் எதுவும் செய்துவிட முடியாது என்பதால், தனக்கேற்படும் நம்பிக்கையின் ஆதரவினால் தான் எதனையும் சாதிக்க இயலும் என்ற உண்மையை மருத்துவன் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
Reference book : Siddha Maruthuva Gurugulam
1. வாதம் (வகாரம்-வேதை)
இது இரும்பு, வங்கம், செம்பு முதலிய மலின உலோகங்களை உயர்ந்த மாற்றுடைய பொன்னாகச் செய்யும் கலையாகும். இதனை, மருந்துப் பொருட்களிலுள்ள வியத்தகு நற்குணங்கள்-காரசார உப்புக்கள், செய நீர், திராவகங்கள் முதலிய இரசாயனப் பொருட்கள்-இரச கந்தக பாடாணங்களைக் கட்டுதல்-தம்பனம்-மாரணம் முதலிய மந்திர அல்லது மாந்தீரீகம்-யோக சக்தியின் வலிமையினாலான மனோதத்துவம் போன்றவற்றின் உதவியால் சாதிக்கலாம். இதில் முழுமை பெற்றவர்கள் வேறெங்கும் கிடையாது.
வாதியானவன் விடாமுயற்சி, தருமசிந்தை, தயாளகுணம், மேலான மனச் சுத்தம் இவற்றோடு, முக்கியமாக தெய்வ பக்தியுள்ளவனாகவும் இருக்க வேண்டும். பேராசையும், பொன்-பொருள்-பணத்தில் ஆசை இருக்கக்கூடாது. மேலும் பிறவியிலேயே சோதிட கிரகங்களின்படி வாதிக்குள் சக்திகள், பூர்வ கருமானுசாரப்படி அமைந்திருக்க வேண்டும். மற்றும் ஒரு சிசு கருத்தரிக்கும்போது பஞ்சபூதங்களின் தொடர்பு எப்படி முக்கியமோ, அதேபோல் வாதம் சித்தியாகவும் அவை கிரமப்படி அமையவேண்டும். இதில் தவறு ஏற்படின் எப்படி கரு சிதைந்துவிடுமோ, அதேபோல் வாதமும் தவறினால் கைகூடாமல் போய்விடும்.
Reference book : Siddha Maruthuva Gurugulam
சித்தர்களின் கொள்கைகள்
அனைத்து சித்தர்களுமே அவர்களின் நூல்களில் வாதம்-வைத்தியம்-யோகம்-ஞானம் ஆகிய விஷயங்களில் தமது கருத்துக்களையும், கொள்கைகளையும் மிகத்தெளிவாகக் கூறியுள்ளனர். மேற்கண்டவற்றுள் அவர்கள் கொண்ட கோட்பாடுகளை சுருக்கமாக கீழே கூறப்பட்டுள்ளது.
1. வாதம் (வகாரம்-வேதை)2. வைத்தியம் (மருத்துவ சிகிச்சை)
3. யோகம் (தியானம்-ஒடுக்கம்)
4. ஞானம் ((தத்துவ-விவேகம்)
Reference book : Siddha Maruthuva Gurugulam
Monday, 19 March 2018
குழந்தை மூளையின் செயல்திறனை அதிகரிக்க
இந்த காலத்து பிள்ளைகள் எல்.கே.ஜி படிக்கிற குழந்தைகள் எடுத்துச் செல்லும் புத்தகத்தைப்பார்த்தால் 12-ஆம் வகுப்பு படிக்கிற மாணவர்களுடைய அளவுக்கு பெரியதாக இருக்கிறது. இந்த சிறிய வயதிலேயே குழந்தையின் மூளையில் அதிகமாக பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் குழந்தைகள் மன அழுத்ததிற்கு ஆளாகிவிடுகின்றனர். அதனால் அவர்கள் மன அழுத்தத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க நல்ல ஆரோக்கியமான உணவுகைளப் பற்றி பார்ப்போம்.
- தினந்தோறும் மதிய உணவில் தயிர் கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளவும்.
- மீன் வைட்டமின் டி உள்ளதால் சிறியவகை மீன்களை குழந்தைகளுக்கு வாரம் 3 நாட்கள் கொடுக்க வேண்டும். பகலில் மட்டுமே கொடுக்க வேண்டும். இரவில் கொடுக்கக்கூடாது.
- நாட்டுக்கோழி முட்டையை நன்கு வேகவைத்து தினமும் காலையில் கொடுக்க வேண்டும்.
- பாலில் புரோட்டின், வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ் அதிகமாக உள்ளதால் தினமும் இரண்டு வேலை பால் கொடுக்கலாம். தயவுசெய்து பாக்கெட் பால் கொடுக்காதீர்கள்.
- அதிகமாக பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். உதாரணமாக பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை, சுண்டல், கடலைப்பருப்பு, சிவப்பு காராமணி, தட்டைப்பயறு மற்றும் உளுத்தம் பருப்பு.
Saturday, 17 March 2018
சித்த மருத்துவம் யாரால் போதிக்கப் பெற்றது?
மாந்த இனத்திற்கு நலமூட்டி ஆயுளை நீடிக்கச் செய்வதற்கென மருத்துவ முறையினை தமிழ் மொழியில் சிவபெருமான் உமையவளுக்கும் - அவள் நந்தி தேவருக்கும் - அவர் தன்வந்திரிக்கும் - அவர் அச்சுவினித் தேவர்கட்கும் - அவர்கள் அகத்தியருக்கும் - அவர் புலத்தியருக்கும் - அவர் செளமியர்க்கும் - அவர் தேரையருக்கும் கற்றுக்கொடுத்ததாகக் கூறப்படுகின்றது. இது சித்தர்களால் உலகில் பரவியதாலேயே சித்தர் மருத்துவம் எனப் பெயர் பெற்றது.
மருத்துவம் சொல் எப்படி ஏற்பட்டது?
மனிதனுக்கு வரும் பிணிகளை தீர்ப்பதற்கென தாவர தாது - சீவ இனங்களைக் கையாண்டு நலமுறும் வழிகளை வகுத்து உள்ளதே "மருத்துவம்" ஆகும். இங்கு மருந்து என்ற சொல் வலித்தல் விகாரம் பெற்று மருத்து எனவாகி அதனைக் கொண்டு புரியும் செயலையுணர்த்த மருத்துவம் என அமைந்தது. இச்சொல் நோயை மருத்தல் என்பதிலிருந்து பிறந்ததாகவும் கூறுவர். இதனை வைத்தியம் - சிகிச்சை - பரிகாரம் - மாற்று மருந்து - நீக்குகை - அகற்றல் எனவும் அழைப்பர்.
பழனி சித்த மருத்துவ சங்கம்
நான் இந்த வலைதளத்தை உருவாக்குவதற்கு உதவியாக இருந்து எனக்கு ஊக்கப்படுத்திய பழனி சித்த மருத்துவ சங்கத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் காலங்களில் தமிழ் மருத்துவம் தழைத்து ஓங்க வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டுக் கொண்டு இருக்கும் மதுரை சித்த மருத்துவக் குருகுலத்தின் எனது குருமார்களின் நல் ஆசியோடு, அவர்கள் வெளியிட்டுள்ள சித்த (தமிழ்) மருத்துவப் பாடப் பயிற்சி நூல் மற்றும் அவர்களின் புகழ் இந்த உலகெங்கும் பரவ வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாக எனக்கு அளித்த சித்த மருத்துவக் குருகுலம் கல்வி அறிவை இந்த உலகெல்லாம் பரவ வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் எழுதிய நூலை அப்படியே இதில் பதிவு செய்துள்ளேன். இது சித்த மருத்துவம் படிக்கும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்கும் என்று நம்புகிறேன். நன்றி வணக்கம்!
Friday, 16 March 2018
சிறுநீரக நோயின் ஆரோக்கியமான உணவுகள் - Healthy Foods for People with Kidney Disease
உணவுகள் செரித்தப்பின் இறுதியாக சிறுநீரகம் யூரியா மற்றும் கிரியாட்டின் கழிவுகளை நம் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. சிறுநீரகம் சரியாக வேலை செய்யவில்லையென்றால் இந்த கழிவுகள் நமது இரத்தத்தில் கலந்து கேடுகளை உண்டாக்கும். இந்த சிறுநீரகம் நமது உடலில் சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளை சரியான அளவில் வைக்க உதவுகிறது.
புரதம், கலோரிசத்து, சோடியம், பொட்டாசியம் மற்றும் திரவ ஆகாரங்களை குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொள்ளவும்.
பொட்டாசியம் 0 முதல் 100 மி.கிராம் உள்ள காய்கறிகள்
1. வெந்தயக்கீரை
2. லெட்டூஸ்
3. பீட்ரூட்
4. சிவப்பு முள்ளங்கி
5. சுரைக்காய்
6. அவரைக்காய்
7. வெள்ளரிக்காய்
8. மொச்சைக்காய்
9. நூல்கோல்
10. பட்டாணி
11. பீர்க்கங்காய்
12. புடலங்காய்
13. சவ்சவ்
14. மாங்காய்
பொட்டாசியம் 101 முதல் 200 மி.கிராம் உள்ள காய்கறிகள்
1. முட்டைகோஸ்
2. கேரட்
3. சின்ன வெங்காயம்
4. வெள்ளை முள்ளங்கி
5. பாகற்காய்
6. கத்தரிக்காய்
7. காலிபிளவர்
8. பீன்ஸ்
9. வெண்டைக்காய்
10. வெங்காயத்தாள்
11. வாழைப்பூ
12. வாழைக்காய்
13. பூசணிக்காய்
14. பச்சை தக்காளி
பொட்டாசியம் 201 மி.கிராம் மேல் உள்ள காய்கறிகள்
1. சிறுகீரை
2. கொத்தமல்லி தழை
3. முருங்கை கீரை
4. பசலைக்கீரை
5. சேப்பங்கிழங்கு
6. சர்க்கரை வள்ளிகிழங்கு
7. மரவள்ளிக்கிழங்கு
8. சேனைக்கிழங்கு
9. முருங்கக்காய்
10. பப்பாளிக்காய்
புரதம் நிறைந்த உணவுகள்
புதர சத்து நிறைந்த உணவுகள் குழந்தைகளை நன்கு வளரச்செய்கிறது, காயம் அடைந்த திசுக்களை சீர் செய்கிறது மற்றும் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது.
புரதச்சத்து நிறைந்த தாணியங்கள்
அரிசி, கோதுமை, கேழ்வரகு, மைதா, பொரி, அவல், மக்காச்சோளம், ரவை மற்றும் சேமியா.
புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள்
துவரம் பருப்பு, கொண்டக்கடலை, கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, பச்சை பயறு, கேசரி பருப்பு, கொள்ளு, சோயா, பட்டாணி, காராமணி, மொச்சை மற்றும் பீன்ஸ்.
Monday, 5 March 2018
சளி மற்றும் தொண்டைவலியைப் போக்கும் சுக்கு - மல்லி காபி
சிறுவர் முதல் பெரியவர் வரை எளிதில் தாக்கக்கூடிய ஒரு நோயாக சளி மற்றும் தொண்டைவலி உள்ளது. இதனை குணப்படுத்த இயற்கையான முறையில் எளிமையான சுக்கு - மல்லி காப்பி தயாரிப்பது எப்படி?
சுக்கு - 5 கிராம், மிளகு - 10 கிராம், திப்பிலி - 10 கிராம், சித்தரத்தை - 10 கிராம், தனியா - 100 கிராம் இவைகளை வாணலில் வறுத்து, ஆற வைத்து அரைத்துக்கொள்ளவும். இந்த தூளை ஒரு டம்ளர் தண்ணீருக்கு இரண்டு ஸ்பூன் பொடியைக் கலந்து, தேவையான அளவு பனை வெல்லத்தை (கருப்பட்டி) சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பின்பு இறக்கி வடிகட்டி இளஞ்சூடாக அருந்த வேண்டும்.
Friday, 2 March 2018
போகர் உருவாக்கிய நவ பாஷாணம்
1. சாதிலிங்கம்
2. மனோசிலை
3. காந்தம்
4. காரம்
5. கந்தகம்
6. பூரம்
7. வெள்ளை பாஷாணம்
8. கெளரி பாஷாணம்
9. தொட்டி பாஷாணம்
2. மனோசிலை
3. காந்தம்
4. காரம்
5. கந்தகம்
6. பூரம்
7. வெள்ளை பாஷாணம்
8. கெளரி பாஷாணம்
9. தொட்டி பாஷாணம்
Friday, 5 January 2018
Anemia - இரத்த சோகைக்கு வைட்டமின் B12 நிறைந்த உணவுகள்
- ஆட்டு சிறுநீரகம், மூளை, ஈரல், கறி
- கோழிகறி
- முட்டை
- பால் மற்றும் பால்சார்ந்த பொருட்கள்
போலிக் ஆசிட் நிறைந்த உணவுகள்
- ஆட்டு சிறுநீரகம், மூளை, ஈரல் கறி
- அனைத்து கீரை வகைகள்
- சோயா, மணிலா
- அனைத்து காய்கறிகள்
- பயறு வகைகள்
- முட்டை
- முழு தானியங்கள்
- பழங்கள்
வைட்டமின் C நிறைந்த உணவுகள்
- எலுமிச்சை
- ஆரஞ்சு
- பைனாப்பிள்
- மாம்பழம்
- பப்பாளி
- கொய்யாப்பழம்
- முந்திரிப்பழம்
- நெல்லிக்காய்
- தக்காளி
- மற்றும் கீரைவகைகள்
Anemia - இரத்த சோகைக்கு இரும்பு சத்து நிறைந்த உணவுகள்
- அவல்
- பட்டாணி
- உலர்ந்த திராட்சை
- பாதாம்
- பிஸ்தா
- சோயா
- முந்திரி
- அத்திப்பழம்
- பேரிச்சம்பழம்
- தேன்
- வெல்லம் (நாட்டு சர்க்கரை)
- பாகற்காய்
- சுண்டக்காய் வற்றல்
- கீரை வகைகள்
- வாழைக்காய்
- பீட்ரூட்
- சீத்தாபழம்
- தர்பூசணி
- சேனைக்கிழங்கு
- எள்ளு
- மீன் (சிறிதளவு)
- முட்டை
- ஆட்டு ஈரல், சிறுநீரகம், மூளை
Thursday, 4 January 2018
What is Anemia - இரத்த சோகை என்றால் என்ன?
இரத்தத்தில் ஹீமோகுளோபின் Hemoglobin குறைவதால் இரத்த சோகை (Anemia) ஏற்படும். இரும்பு, புரதம், வைட்டமின் B12, வைட்டமின் C, ஃபோலேட் folate ஆகிய சத்துக்கள் உணவில் குறைவதால் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படுகிறது. எனவே மேற்கூறிய சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகை குணமாகும். இந்த உணவு வகைகளை கவனமாக பின்பற்ற வேண்டும்.
- தினமும் ஏதாவது ஒரு கீரையை உண்ண வேண்டும்.
- தினமும் காலையில் 6 பேரிச்சம்பழம், ஒரு வாழைப்பழம் உட்கொள்ள வேண்டும். (காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் உண்டால் மிகவும் நல்லது)
- எலுமிச்சை ஜூஸ் உடன் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக் குடிக்கவும்.
- தினமும் மதிய உணவில் 10 சுண்டக்காய் வற்றல் அவசியம் சேர்க்கவும்.
- தினமும் இரண்டு காய்கறிகள், ஏதாவது ஒரு பழம் பச்சையாக அவசியம் சாப்பிட வேண்டும்.





































